இலங்கையில் இருந்து மண்டபம் அருகே வேதாளை பகுதிக்கு நேற்று காலை தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் வளைக்குடா கடற்பகுதியின் சுங்க அதிகாரிகள் , மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு , கடலோர காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர தேடலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வேதாளைப்பகுதிக்கு 7 கிலோ கிராம் தங்கத்தை காரில் கடத்திக்கொண்டு சென்ற நபர்களை அதிகாரிகள் துரத்திச்சென்று திருப்புவனம் அருகே வைத்து கைது செய்தனர்.
அத்தோடு கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 4 கோடி ரூபா பெறுமதியான 7 கிலோகிராம் தங்க பிஸ்கட்டுக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அத்தோடு இவ்வாறு கடத்தலில் ஈடுபட்ட மதுரை மற்றும் சென்னையை சேர்ந்த நபர்களை மதுரையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், தீவிர விசாரணைகளையும் மேற்கொண்டனர்.
குறித்த விசாரணையின் போது தெரியவந்துள்ளதாவது, இலங்கையில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்கு தங்கத்தை கடத்தி சென்றுள்ளமையானது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அத்தோடு கடந்த 2017, 2018 ஆம் ஆண்டுகளில், குறித்த எல்லை வழியாக பாரியளவுத் தொகை தங்கம் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM