எம்.மனோசித்ரா
பொதுஜன பெரமுன கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் பெற்ற வெற்றியைக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்று எண்ணக் கூடாது எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி எந்த கட்சிக்கும் வெற்றி பெறமுடியாது. சுதந்திரக் கட்சியே அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் என்றும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட ரீதியிலான மாநாடு நேற்று சனிக்கிழமை மாத்தளை - நாவுல நாலந்த மைதானத்தில் இடம்பெற்றது. இம் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி கூறியதாவது :
கடந்த 2018 பெப்ரவரி உள்ளூராட்சி தேர்தலின் போது வாக்களர்கள் வேட்பாளர் யார் என்பது பற்றி சிந்திக்கவில்லை. மாறாக மத்திய வங்கி மோசடிக்கார்களுக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக வாக்களித்தால் போதும் என்ற மனநிலையிலேயே இருந்தனர். ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் யார் என்றும், அவரது வேலைத்திட்டங்கள் என்ன என்பது பற்றியும் மக்கள் சிந்திக்கின்றனர். எனவே பொதுஜன பெரமுன வெற்றி பெற்று விடுவோம் என்ற மமதையில் இருந்து விடக் கூடாது.
அத்தோடு தற்போதுள்ள நிலைவரத்தின் படி எந்தவொரு வேட்பாளருக்கும் 40 வீதத்தை விட அதிக வாக்குகள் கிடையாது. எனவே நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிடமே இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
2015 ஆம் ஆண்டு மக்கள் ஜனநாயகத்தை மாத்திரமே எதிர்பார்த்து எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தார்கள். அதனை நான் நிறைவேற்றியுள்ளேன். நாம் இவ்வாறு சென்று கொண்டிருக்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தவறான அரசியல் பாதையில் செல்ல முற்பட்டார். அதன் பயனாகவே 2015 க்கு முன்னரை விடவும் அதற்கு பின்னர் மிகப் பெரிய ஊழல் மோசடியான மத்திய வங்கி மோசடி இடம்பெற்றது.
அதனாலேயே நாம் தேசிய அரசாங்கத்திலிருந்து விலக வேண்டியேற்பட்டது. ஆனால் இவ்வாறான பிரதான கட்சிகள் மீதும் அதன் தலைவர்கள் மீதும் காணப்படுகின்ற எவ்வித குற்றச்சாட்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மீது கிடையாது. சுதந்திர கட்சியின் எதிர்காலத்தில் நாட்டின் எதிர்காலம் தங்கியிருக்கிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM