(ஜெயந்தி)
ஆண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று வழுக்கை. வயோதிபத்தின் அடையாளமான வழுக்கை இளம் வயதிலேயே வருவதுதான் பிரச்சினையாகின்றது. இதற்குப் பலவாறு மருந்துகளும் பூச்சுகளும் அறிமுகப்படுத்தப்பட்ட போதும். இது இன்னமும் ஆண்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை தரவில்லை என்றுதான் கூறு வேண்டும்.
புதிய முயற்சியாக ஆண்கள் விரும்பி அணியும் தொப்பிகளில் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழுக்கைகளில் முடி வளர்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தானாக சிறியமின்கலன்கள் மூலம் மின்னை உற்பத்திசெய்து உச்சந்தலையில் ஒரு சிறு அதிர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொப்பி வழுக்கைத்தலையில் ஒரு மாதத்திற்குள் முடியை மீண்டும் வளரவைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
அத்துடன் சோதனைகள் மூலம் முடி உதிர்தலுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளை விட இந்த தொப்பிகள் பக்க விளைவுகள் எதுவும் இன்றி சிறப்பாகச் செயற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
தொப்பியின் உட்பகுதியில் இணையப்பட்டுள்ள ஒரு மில்லி மீற்றர் அகலமான மின் இயக்கி தூண்டப்படும்போது உச்சந்தலையில் மின்சார அதிர்வுகளை ஏற்படுத்தி சருமத்தில் இயற்கையான முடி வளர்ச்சி ஹோமோன்களை ஊக்குவிக்கிறது.
மின்சார அதிர்வுகளை ஏற்படுத்தும் சாதனம் மென்மையாகவும் அணிபவர்களுக்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஸ்கான்சின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த தொப்பிகளைப் பல ஆண்களுக்குக் கொடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதன் பின் உலகிலா விய ரீதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM