தனியார் வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து பண மோசடி செய்த நால்வருக்கு நீதிமன்று அதிரடி உத்தரவு ; முகாமையாளருக்கு வலைவீச்சி

Published By: Digital Desk 4

21 Sep, 2019 | 04:28 PM
image

தனியார் வங்கி ஒன்றின் சங்கானை கிளையில் கவரிங் நகைகளை அடகு வைத்து 10 மில்லியன் (ஒரு கோடி) ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கியின் உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் வாடிக்கையாளர்கள் மூவர் என நால்வர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அத்துடன், தலைமறைவாகியுள்ள முகாமையாளரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா பிறப்பித்தார்.

தனியார் வங்கியின் சங்கானைக் கிளையில் பணியாற்றிய முகாமையாளர் மற்றும் கடன் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர், வாடிக்கையாளர்கள் மூவர் என ஐந்து பேர் இணைந்து தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை அடகுவைத்து முற்பணம் பெற்றிருந்தனர்.

இந்த மோசடி தொடர்பில் 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற நிலையில் முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்த முகாமைத்துவம், மோசடி தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவிடம் முறைப்பாடு செய்தது.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்ற விசாரணைப் பிரிவு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஐவருக்கு எதிராக முதல் அறிக்கையைத் தாக்கல் செய்தது. எனினும் மோசடி இடம்பெற்ற நீதிமன்ற நியாயாதிக்கம் மல்லாகம் நீதிமன்ற வலயம் என்பதால் வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த குற்ற விசாரணைப் பிரிவினர் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரையும் நீதிமன்றின் உத்தரவில் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

வங்கிக் கிளையின் முகாமையாளர் ரமணன் என்பவர் தலைமறைவாகிய நிலையில் உத்தியோகத்தர் மற்றும் 3 வாடிக்கையாளர்களையும் கைது செய்தனர். அவர்கள் நால்வரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று(20) வெள்ளிக்கிழமை முற்படுத்தினர்.

வழக்கை விசாரணை செய்த மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, சந்தேகநபர்கள் நால்வரையும் வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் தலைமறைவாகியுள்ள முன்னாள் முகாமையாளரைக் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு பிடியாணை உத்தரவையும் நீதிவான் பிறப்பித்தார்.

“வங்கியின் நிதியை மோசடி செய்த நால்வர் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பில் உரிய பணத்தை மீளச் செலுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது.

எனினும் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்காததால் நீதிமன்றின் ஊடாக நடவடிக்கைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியால் வாடிக்கையாளர்களின் நிதி மற்றும் நகைகளுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை” என்றவாறு வங்கியின் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31