கூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்

Published By: Digital Desk 3

21 Sep, 2019 | 03:30 PM
image

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் எவ்­வித முடிவை எடுக்க வேண்­டு­மென்று வட­, கி­ழக்கு தமிழ்மக்கள் எதிர்­பார்க்­கின்­றார்­களோ அந்த எதிர்­பார்ப்­பையும் விருப்­பத்­தையும் நிறை­வேற்றும் பாணியில் நடந்­து­கொள்ள இரா.சம்­பந்தன் முற்­ப­டு­கிறார் என்­பது அண்­மைய சந்­திப்­பு­களில் அவர் தெரி­வித்த கருத்­து­க்க­ளி­லி­ருந்து அறிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாகவுள்­ளது.

கடந்த காலத்தில் நடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லாக இருக்­கலாம் அல்­லது பொதுத் தேர்­த­லாக இருக்­கலாம், மாற்று தேர்­தல்­க­ளாக இருக்­கலாம், தீர்க்க தரி­ச­ன­மாக, நடந்து கொள்­ளா­மையின் கார­ண­மா­கவே பல இழப்­பு­க­ளையும் தோல்­வி­க­ளையும் எல்­லா­வற்­றுக்கு மேலாக ஏமாற்­றங்­க­ளையும் தமிழ் மக்கள் சந்­திக்க வேண்­டி­யி­ருந்­தது. அதே தவறை மீண்டும் விடும் நிலை­யொன்றை கூட்­ட­மைப்பு தலை­வர் விடுவாராயின், இனி எக்­கா­லத்­தி­லுமே விமோ­ச­ன­மற்ற நிலையே தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­படும் என்று பயந்து கொண்­டி-­ருந்த நிலையில் சம்­பந்­தரின் தீர்க்­க­மான கருத்­து­க்களும் முடி­வு­களும் ஆறுதல் அளிக்­கின்றன என  பொது­வா­கவே தெரி­விக்­கப்­படுகிறது.  

இவ்­வார ஆரம்­பத்தில் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸவின் ஆத­ரவு அணிக்கும் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கும் இடையில் இடம்­பெற்ற பேச்சுவார்த்­தை­யின்­போது இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டையே கருத்­துப்­ப­ரி­மாற்றம் இடம்­பெற்ற வேளை, தலைவர் இரா.சம்­பந்தன் அவர்கள் மிக காட்­ட­மான கருத்­து­க்களை முன்­வைத்­தி­ருந்தார்.

”வர­லாற்றில் ஒரு சந்­தர்ப்­பத்தில் கூட, இனப்­பி­ரச்­சினை தீர்வு தொடர்­பாக பேசாத சஜித் பிரே­ம­தா­ஸவை நாம் எப்­படி ஆத­ரிக்க முடியும். எமது மக்­களை நாம் தொடர்ந்து ஏமாற்ற முடி­யாது. இனப் பிரச்­சி­னைக்­கான வர­லாற்று அறிவு, புரிதல் உணர்­திறன் அல்­லது குறிப்­பிட்ட அக்­க­றை­யில்­லா­த­வ­ரா­கவே இருந்­துள்ளார். அவரை நம்பும் அள­வுக்கு எவ்­வகை வாக்­கு­று­தி­களை அவர் எமக்குத் தர­மு­டியும்.

காலா­கா­ல­மாக தேர்தல் காலத்தில் இது போன்ற வாக்­கு­று­திகள் அளிக்­கப்­பட்­ட­போதும் அவை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. சஜித் அர­சி­யலில் ஒரு சின்­னக்­கு­ழந்தை. அர­சி­யலில் அதி­கா­ரப்­ப­கிர்வு தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வின் அர்த்­தத்தைப் புரி­யாத ஒரு நபர் ”என சம்­பந்தன் அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் தலை­மையில் சந்­திக்க வந்த ஆத­ரவு அணி­யி­ன­ரிடம் கடும்­போக்கில் கதைத்­த­தாகத் தெரி­விக்கப்படு­கி­றது.

சம்­பந்­தரின் க­டும்­போக்கு நிலை தொடர்பில் வட­கி­ழக்கு மக்கள் அதிக ஆத்ம திருப்­தி அடைந்­துள்­ளார்கள் என்­ப­தற்கு அப்பால் இவ்­வா­றா­ன­தொரு கடும்­போக்கு நிலைப்­பாட்டை எடுக்க வேண்­டிய தேவைக்கு தள்­ளப்­பட்­ட­மைக்­கான கார­ணங்கள் பல­வெ­னவே சுட்­டிக்­காட்­டப்­ப­டலாம். அதில் இரு அனு­ப­வங்­களும் ஏமாற்­றங்­களும் முக்­கி­ய­மா­னவை.

2009 ஆம் ஆண்டு யுத்த முடி­வுக்குப் பிறகு இரு ஜனா­தி­பதி தேர்தல், பொதுத்­தேர்தல் இரண்டை கூட்­ட­மைப்பு எதிர்­கொண்­டுள்­ளது. இத்­தேர்தல் ஒவ்­வொன்றின் மூலமும் எதிர்பார்க்­கப்­பட்ட அபி­லா­ஷை­களும் அடை­வு­களும் அடை­யப்­ப­ட­வில்­லலை, ஏமாற்­றப்­பட்­டி­ருக்­கி­றோ­மென்ற உண்­மை­யி­லி­ருந்து மீள முடி­யாத நிலை தமிழ்மக்­க­ளுக்கும் தலை­மைக்கும் தீராத வடு­வா­கி­யுள்­ளது என்­ப­தே­யாகும்.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் களம் இறக்­கப்­பட்ட பொது வேட்­பாளர் தொடர்பில் தமிழ்மக்­களும் அவர் தம் தலை­மை­களும் கொண்­டி­ருந்த அதிஉச்ச நம்­பிக்கை அதே­போன்று வர­லாற்றில்      முதல் தடவையாக இரு தேசியக் கட்­சிகள் கைகோர்த்து அமைக்­கப்­பட்ட தேசிய அர­சாங்­கத்தின் மீது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கொண்­டி­ருந்த அசைக்க முடி­யாத நம்­பிக்கை அனைத்­துக்கும் மேலாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­­ர­ம­சிங்க ஆகியோர் மீது கொண்ட விசு­வாசம் எல்­லாமே பொரிமாத் தோண்­டியின் கதை­யாகிப் போன நிலை­யி­லேயே புதிய தேர்தலுக்கு முகங் ­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது.

இரண்டாம் காரணம் தமிழ்மக்கள் குறிப்­பாக வட­கி­ழக்கு மக்கள் 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது கூட்­ட­மைப்­பினர் முடிவு எடுக்கும் முன்பே அவர்கள் ஒரு முடி­வுக்கு வந்து விட்­டார்கள். அவர்­களின் முடி­வுக்கு மாறாக இன்­னொ­ரு­வித முடிவை எடுக்கும் வல்­லமை நிலையில் அக்­கா­லத்தில் கூட்­ட­மைப்பு இல்­லாத கார­ணத்தினாலேயே மக்கள் எடுத்த முடி­வுக்கு அமைய தாமும் சாய­வேண்­டு­மென்ற தீர்­மா­னத்­திற்கு அமை­யவே தபால் மூல வாக்கு அளிக்­கப்­பட்ட பின்பே கூட்­ட­மைப்பு தனது முடிவைப் பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருந்­தது.

அத்­த­கை­ய­தொரு மாய சூழ்­நி­லையைப் போல இன்­றைய சூழ்­நிலை காணப்­பட்­டாலும் மக்கள் மனதில் ஊறிகிடக்கும் விட­ய­மாக இன்று காணப்­ப­டு­வது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, நடை­பெ­ற­வி­ருக்கும் ஜனா­தி­பதி தேர்­தலை இறுதி வாய்ப்­பாக நினைத்­துக்­கொண்டு பேரம் பேசும் ஆதிக்க அர­சி­யலை செய்ய எத்­த­னிக்க வேண்டும். அதி­லி­ருந்து வழுக்கி விழுந்து விடக்­கூ­டாது. எத்­த­கைய கட்­சி­யாக இருக்­கலாம் எந்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக இருக்­கலாம் அவ­ரி­ட­மி­ருந்து ஆணித்­த­ர­மான உத்­த­ர­வா­தத்தைப் பெற்ற பின்பே அவ­ருக்கு ஆத­ரவு அளிக்கும் தீர்­மா­னத்­திற்கு வர­வேண்டும். முடிவு எடுக்க வேண்டும். அதி­காரப் பகிர்வு அர­சியல் தீர்வு என்ற தத்­து­வத்­துக்குள் அடக்­கப்­பட வேண்­டிய அனைத்து விட­யங்­களும் உள்­ள­டங்­கிய தீர்வை குறை­யின்றி பய­மின்­றித்­தர உத்­த­ர­வாதம் அளிக்கும் நப­ருக்கே இம்­முறை கூட்­ட­மைப்பு தனது ஆத­ரவை நல்க முன்­வர வேண்டும்.

பக­லொன்று பேசி இர­வொன்று கூறும் போலித்­த­ன­மான தலை­மை­க­ளுக்கு ஆத­ரவு அளிக்க முன்­வ­ரக்­கூ­டாது என்ற நிலைப்­பாட்டில் தமிழ் மக்கள் இம்­முறை உறு­தி­யாக நிற்­கின்­றார்கள் என்ற உண்­மையை யதார்த்­த­பூர்­வ­மாக கூட்­ட­மைப்பு தரப்­பினர் உணர்ந்து கொண்­டதன் கார­ண­மா­கவே இன்­றைய கடும்­போக்கு நிலையைக் கடைப்­பி­டிக்க முற் ­ப­டு­கி­றார்கள் என்­பது தமிழ்மக்­களின் அபிப்­பி­ரா­ய­மாக இருக்­கி­றது.

இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­யாக இருக்­கலாம் அன்றில் 2002 ஆம் ஆண்­டுக்குப் பின்­னுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பாக இருக்­கலாம் நிபந்­த­னை­யுடன் கூடிய அல்­லது பேரம் பேசும் ஆதிக்­கத்­துடன் எந்­த­வொரு தேர்­த­லையும் எதிர்­கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. 1957 இல் செய்­யப்­பட்ட பண்டா –செல்வா உடன்­ப­டிக்கை, 1965 மேற்­கொள்­ளப்­பட்ட டட்லி – செல்வா ஒப்­பந்தம் ஆகிய இரண்டும் பேரம் பேசும் தன்­மை­யி­னாலோ அல்­லது பாரா­ளு­மன்ற பலத்தின் பேரிலோ செய்து கொள்­ளப்­பட்­ட­வை­யல்ல. அதே­வேளை ரணில் –பிரபா உடன்­ப­டிக்கை, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க கால தீர்­வுப்­பொதி என்­பன ஆயுத சம­ப­லத்தால் தீர்­மா­னிக்­கப்­பட்­டவை. இவ்­வகை அர­சியல் ஓட்­டத்தில் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனின் நிபந்­த­னை­யுடன் கூடிய முன் வைப்­புகள் கூட்­ட­மைப்பின் புதிய போக்கை அல்­லது சம்­பந்­தனின் நீண்­ட­கால பட்­ட­றிவை புட­மிட்டுக் காட்­டு­வ­தாக அமை­கி­றது.

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­க­ முயற்சிக்கும்  ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலை­வ­ரான சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு ஆத­ரவு கோரும் வகையில் அவரின் ஆத­ர­வ­ணி­யினர் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யுள்­ளனர். அந்த வகையில் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணித் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன், ஜாதிக ஹெல உறு­மய­ தலைவர் சம்­பிக்க ரண­வக்க ஆகி­யோ­ருடன் சஜித் ஆத­ரவு அணி பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போது அந்தக் கட்சித் தலை­வர்கள் தமது நிபந்­த­னை­க­ளையும் கோரிக்­கை­க­ளையும் கவ­ன­மாக முன்­வைத்­துள்­ளனர்.

அந்த வகையில் தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணி­யினர் மலை­யக மக்­களின் நாளாந்த பிரச்­சி­னைகள், தொழி­லா­ளர்­களின் சம்­பள விவ­காரம், அவர் தம் வாழ்­வா­தா­ரங்­க­ளுக்கு முடிவு காணப்­பட வேண்­டு­மென்ற கோரிக்­கையை முன் வைத்­துள்­ளனர். முஸ்லிம் சமூ­கத்தின் மீதான தற்­கால அடக்­கு­மு­றைகள்,  பாது­காப்பு குறித்து முன்­னெ­டுக்க வேண்­டிய நட­வ­டிக்­கைகள் போன்ற  நியா­ய­மான நிபந்­த­னை­களை முஸ்லிம் தரப்­பினர் முன்­வைத்­துள்­ளனர். இந்த தரப்­பி­னரின் கோரிக்­கையை கால­தா­ம­த­மின்றி தீர்த்து வைப்­ப­தா­கவும் உடன்­பாடு ஏற்­பட்­ட­தற்கு அமைய சஜித்­துக்கு ஆத­ரவு தரு­வ­தற்கு தாம் தயா­ரா­க­வுள்­ளோ­மென மேற்­படி பங்­கா­ளிக்­கட்­சி­யினர் உத்­த­ர­வாதம் அளித்­துள்­ளனர். இவர்­களின் நிலையில் அடிப்­படைப் பொரு­ளா­தார மற்றும் வாழ்வு நிலைப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு வேண்­டு­மென முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. எந்­த­வொரு நிலை­யிலும் அதி­காரப் பகிர்வு பற்­றியோ அர­சியல் சாசனம் பற்­றியோ கருத்­துகள் இடம்­பெற்­ற­தாகத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் கூட்­ட­மைப்­பி­னரோ பின்­வரும் நிரை ஒழுங்கில் தமது நிபந்­த­னை­களை வரி­சைப்­ப­டுத்திக் காட்­டி­யுள்­ளனர்.

1)புதிய அர­சியல் அமைப்­பொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும்.  

2) கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­பட வேண்டும். 3) வடக்கும் கிழக்கு தமிழர் பிர­தே­சங்­க­ளுக்கு துரி­த­மான அபி­வி­ருத்தி கொண்டு வரப்­பட வேண்டும்.

4 ) வேலை வாய்ப்­புக்கள் உரு­வாக்­கப்­பட வேண்டும். 

5) மக்­க­ளுக்குத் தேவை­யான வீட்டுத் திட்­டங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட வேண்டும். இவ்­வா­றான பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கான வாக்­கு­று­தி­களே எமக்கு வேண்டும். இவற்றை நிறை­வேற்றக் கூடி­ய­வரை நாம் ஆத­ரிக்கத் தயா­ரா­க­வுள்­ளோ­மென  சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.சம்­பந்­தனின் இக்­கோ­ரிக்­கை­க­ளா­னது மிக நீண்­ட­கால மற்றும் மக்­களின் எதிர்­பார்ப்பின் அடிப்­ப­டையில் கூறப்­பட்ட கோரிக்­கை­க­ளே. இந்தக்­கோ­ரிக்­கை­களை நெகிழ்ந்து கொடுத்தோ தட்­டிக்­க­ழித்தோ செல்­லக்­கூ­டிய நிலையில் தமிழ் மக்­களின் நிலைப்­பாடுகளு­மில்லை, போக்­கு­மில்­லை­யென்­பது தெளி­வான விட­ய­ம்.மேலே வரி­சைப்­ப­டுத்திக் காட்­டி­யுள்ள கோரிக்­கை­களில் தென்­னி­லங்கை தலை­மை­க­ளாலோ மக்­க­ளாலோ ஜீர­ணிக்க முடி­யாத விவ­கா­ரங்­க­ளாகக் காணப்­ப­டு­பவை புதிய அர­சியல் அமைப்­பொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்­டு­மென்ற விட­யங்­க­ள்.அமைச்சர் சஜித்தைப் பொறுத்­த­வ­ரை, கூட்­ட­மைப்பின் தலை­மையால் விடு­விக்­கப்­பட்­டி­ருக்கும் மேற்­படி நிபந்­த­னையை ஏற்­றுக்­கொள்ளும் திறன் அவ­ரிடம் உண்டா என்­பது. அவ்­வாறு ஒரு வாக்­கு­று­தியை தமிழ் தலை­மை­க­ளுக்கு அளித்து விட்டு தென்­னி­லங்­கையில் அவரால் தலை­காட்­ட­மு­டி­யுமா என்­பது இன்­னொரு சந்­தேகம். அண்­மையில் யாழ்ப்­பா­ணத்­துக்குச் சென்­றி­ருந்த சஜித், ஊட­க­வி­ய­லாளர் வின­விய வினா­வுக்கு பதில் அளிக்­கையில் வட கிழக்குப் பிரச்­சி­னைக்­கான தீர்வை, 13 ஆவது திருத்­தத்தை உச்ச அளவில் அமுல்­ப­டுத்­து­வதன் மூலம் தீர்த்து வைப்பேன் என பதிலளித்­துள்ளார்.இவர் தந்தை பிரே­ம­தாஸ இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தை எதிர்த்­தவர் ; மாத்­தி­ர­மின்றி 13 ஆவது திருத்­தத்தின் மூலம் உரு­வாக்­கப்­பட்ட மாகாண ஆட்­சி­முறை ஒழிக்­கப்­பட வேண்­டு­மென கங்­கணம் கட்­டிய ஒருவர். இந்­திய  ரா­ணு­வத்தை வெளி­யேற்ற வேண்­டு­மென்­ப­தற்­கா­கவே விடு­தலைப் புலி­க­ளுடன்  ர­க­சிய ஒப்­பந்­த­மொன்றை செய்­து­விட்டுக் காரியம் நிறை­வே­றிய பின் கைக­ழுவி விட்ட பெருமை இவ­ரையே சாரும்.

இவ­ருக்கு ஆத­ரவு நல்கும் ஒருவர் கூட்­ட­மைப்­புக்கும் சஜித் அணிக்கும் இடையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்தை தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில், ஒற்றை ஆட்­சிக்குள் அதி­யுச்ச அதி­கா­ரப்­ப­கிர்வு என்ற அடிப்­ப­டையில் மட்­டுமே தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்த முடி­யுமே தவிர சமஷ்டிக் கோரிக்­கை­யுடன் சஜித் பேச்­சு­வார்த்தை நடத்தத் தயா­ரில்­லை­யெனக் கூறி­யுள்ளார். இருந்­த­போ­திலும், ”முஸ்லிம் சிங்­களக் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி ஆத­ரவைப் பெற்­றுள்ளேன். வெகு­வி­ரைவில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்ளேன்” என அமைச்சர் சஜித் கூறி­யி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சஜித்­துடன் கூட்­ட­மைப்பு நடத்­திய பேச்­சு­வார்த்தை தொடர்பில் கூட்­ட­மைப்­புக்குள் இரு வேறு­பட்ட கருத்­துகள் காணப்­ப­டு­வ­தா­கவும் சில வதந்­திகள் தெரி­விக்­கி­ன்றன. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (17.09.2019) கூட்­ட­மைப்­பி­ன­ரி­டையே நடந்த கலந்­து­ரை­யா­டலின் போது தலைவர் சம்­பந்தன் ஏலவே சஜித் ஆத­ர­வ­ணி­யுடன் பேசிய விட­யங்கள் தொடர்­பாக விளக்­கும்­போது தமிழ்மக்­களின் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பது தொடர்பில் சஜித்­திடம் தெளி­வான திட்­டங்கள் இல்­லை­யெனக் கூறி­யுள்ளார்.

இந்த விவ­காரம் தொடர்பில் இரா.சம்­பந்தன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் ஆகிய இரு­வரும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க வேட்­பா­ள­ராக களம் இறங்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டிலும் கூட்­ட­மைப்பின் ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இதற்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தா­கவும் சில வதந்­திகள் உலாவி வரு­கின்­றன. இதில் உண்மைத் தன்மை இருக்­கலாம்; இல்­லாமலும் இருக்­கலாம். ஆனால் பிர­தமர் ரணில் அமைச்சர் சஜித் என்று வரு­கி­ற­போது கூட்­ட­மைப்­பினர் எடுக்கக் கூடிய முடிவு தொடர்பில் மாற்றுக் கருத்து இருக்க முடி­யாது. இதன் கார­ண­மாக கூட்­ட­மைப்­புக்குள் ஆத­ர­வான – எதி­ரான கருத்­துக்கள் தோன்ற இம்­முறை வாய்ப்­புகள் அதி­க­மா­கவே காணப்­ப­டு­கி­ன்றன. எவ்­வாறு எதிர்­வாத கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டாலும் தலைவர் சம்­பந்­தனின் முடிவு எடுக்கும் திறனில் கட்சி ஒட்டுமொத்­த­மாக உடன்­பட்­டுப்­போகும் சூழ்­நி­லையே அதி­க­மாக ஏற்­படும்.

எது எவ்­வாறு இருந்த போதிலும் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (17.09.2019) பிர­த­ம­ருக்கும் கூட்­ட­மைப்­புக்கும் இடையில் நடை­பெற்ற சந்­திப்பின் போது சம்­பந்தன் பிர­தமர் ரணி­லிடம் மிகவும் காட்­ட­மாக வினா­விய விட­யங்கள் ஊட­கங்­களில் தலைப்புச் செய்­தி­க­ளாக வெளி­வந்­துள்­ளன. 

“புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­ப­டுமா? தமிழ் மக்­களின் நீண்ட காலப் பிரச்­சி­னைக்­கான உறு­தி­யான தீர்­வாக எதனை முன்­வைக்கப் போகி­றீர்கள் என்­பதை துணி­க­ர­மாகக் கூறினால் மட்­டுமே எமது அடுத்த கட்ட தீர்­மா­னத்தை நாம் எடுப்போம். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தீர்­மானம் என்ன என்­பது பற்றி தெளி­வான விளக்­கத்தை அளிக்க வேண்­டு­மென சம்பந்தனிடம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலர் வலி­யு­றுத்தி வரும் நிலை­யி­லேயே அவர் மேற்­படி சந்­திப்பின் போது வெட்­டொன்று துண்டு இரண்­டென கார­சா­ர­மான கேள்­வி­களை முன் வைத்­துள்ளார்.இந்தச் ­சந்­திப்­பின்­ உ­ரை­யா­டல்­களும் தர்க்­கித்­தல்­களும் வழ­மையைப் போல் அல்­லாது சூடா­கவும் கார­சா­ர­மா­கவும் இருந்­துள்­ளது என்­ப­தற்கு அப்பால் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனின் புதிய போக்­கையும் தீவி­ரத்­தையும் எடுத்துக் காட்­டு­வ­தா­கவே அமை­கி­றது. வர­லாற்றில் ஏற்­பட்ட தொடர் நிலை ஏமாற்­றங்கள், நம்­பிக்கை அறுப்­புகள் அவ­ருக்கு இவ்­வா­றா­ன­தொரு அனு­பவ முடிவை எடுக்க வேண்­டிய தேவையை உணர்த்­தி­யுள்­ளது. இவ்­வகை முடி­வொன்­றுக்கே கூட்­ட­மைப்பின் தலை­வரும் கட்­சி­யி­னரும் வர­வேண்­டு­மென்ற நீண்­ட­கால எதிர்­பார்ப்பு  கொண்­ட­வர்­க­ளாக தமிழ்மக்கள் இருந்து வரு­கி­றார்கள் என்­பதே உண்மை.

அது மட்­டு­மன்றி தென்­னி­லங்கைத் தலை­மை­களின் ஏமாற்று வித்­தைகள் ஓர­மாக்கிப்  போட நினைக்கும் இழிநிலை எண்­ணங்­க­ளுக்கு முடி­வு­காண வேண்­டு­மாயின் இவ்­வா­றா­ன­தொரு முடி­வுக்கே வர­வேண்­டு­மென்­பது தமிழ்மக்கள் அனை­வ­ராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்­டிய விடயம். ரணி­லு­ட­னான சந்­திப்­பின்­போது அவர் கூட்­ட­மைப்­பி­ன­ரிடம் அழுத்­த­மான வாக்­கு­று­தி­களை நல்­கி­யி­ருப்­ப­தாக சிங்­கள மற்றும் ஆங்­கில ஊட­கங்கள் செய்­திகள் வெளி­யிட்­டுள்­ளன. புதிய அர­சியல் அமைப்­பொன்றை உரு­வாக்கத் தேவை­யான சகல வேலைத்­திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்து ஒருவருட காலத்­துக்குள் புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்ததாக அறிய வருகிறது. இவரின் வாக்குறுதி தொடர்பில் கூட்டமைப்பினர் என்ன முடிவை எடுக்கப்போகிறார்கள் என்பதற்கு அப்பால் தமிழ்மக்களின் நீண்ட கால அபிலாஷைகள் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகள் என்பவற்றை உள்ளடக்கிய வகையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் முயற்சிக்கு பிரதமர் எதிர்காலத்தில் தன்னை தயார்படுத்திக் கொள்வாரா என்ற கேள்வியும் தொக்கி நிற்கின்றது.

எவை எப்படியிருந்த போதிலும் கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடு தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு ஏட்டிக்குப் போட்டியான எதிர்ப்பு அலைகள் வீசும் நிலை உருவாகியுள்ளன. இதன் ஒரு அம்சமாகவே கடந்த திங்கட்கிழமை (16.09.2019) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வில் சில பிரகடனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. 

01. தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை சிங்களத் தலைமைகளும் அவர் தம் மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

02. தீர்வு குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

03. சர்வதேச சமூகம் தலையீடு செய்ய வேண்டும். 

04. சுய நிர்ணய உரிமை

அடிப்படையிலான சமஷ்டித் தீர்வே தமிழ் மக்களுக்கு வேண்டுமென்ற கோஷத்துடனான பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பிரகடனம் தொடர்பில் ஆழமான கருத்துகளை முன்வைப்பது கூட்டமைப்பின் பொறுப்பில்லையாயினும் கவனத்தில் கொள்ளவேண்டிய தேவை ஜனநாயகக் கட்சியென்ற வகையிலும் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையிலும் அந்த தார்மீகப்பொறுப்பு இருக்கிறது.

எது எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு எடுக்கப்போகும் முடிவானது தமிழ் மக்களின் எதிர்கால தலைவிதியையும் இருப்பையும் தீர்மானிக்கப் போகும் விவகாரம் மாத்திரமல்ல, கூட்டமைப்பின் புதிய மாற்றத்துக்கான பாதையையும் திறந்து விடப்போவதாகவே இருக்கவேண்டும்.

திரு­மலை நவம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04