இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ராகுல்டிராவிட்டை ஐசிசியும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையும் அவமதித்துள்ளதாக கொதித்தெழுந்துள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை டுவிட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஐசிசி தனது தலைசிறந்த வீரர்களிற்கான ஹோல் ஓவ் பேம் பிரிவில் ராகுல் டிராவிட்டின் பெயரை இணைத்துகொண்டுள்ள அதேவேளை டிராவிட் இடது கை வீரர் என தெரிவித்துள்ளது. ஐசிசியின் இணையத்தளத்திலேயே இந்த பிழை இடம்பெற்றுள்ளது.
இதேவேளை ராகுல்டிராவிட் இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரியுடன் காணப்படும் படமொன்றை வெளியிட்டுள்ள பிசிசிஐ இந்தியாவின் இரு தலைசிறந்த வீரர்கள் என குறிப்பி;ட்டுள்ளது.
இந்த இரு விடயங்களிற்கும் எதிராக இந்திய ரசிகர்கள் தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
16 வருடங்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய 36 சதங்கள் 63 அரைசதங்களுடன் 13,288 டெஸ்ட் ஓட்டங்களையும் 12 சதங்கள் 83 அரை சதங்களுடன் 10899 ஓட்டங்களையும் பெற்றவர் வலது கை துடுப்பாட்ட வீரரா இடது கைது துடுப்பாட்ட வீரரா என ஐசிசிக்கு தெரியாதா என சமீர் ரவுட் என்பவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளதுடன் ஐசிசிக்கு வெட்கப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஐசிசி மதுபோதையில் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ள டெரிக் கிளட்சொன் என்பவர் உலக கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அமைப்பினால் ஒரு துடுப்பாட்ட ஜாம்பவான் குறித்த சரியான தகவல்களை பெற முடியாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை ராகுல்டிராவிட் ரவிசாஸ்திரியுடன் காணப்படும் படத்தை வெளியிட்டு இந்தியாவின் இரு தலைசிறந்த வீரர்கள் என பிசிசிஐ குறிப்பிட்டுள்ளதை கடுமையாக சாடியுள்ள அனு ஸ்மித்தா என்ற பெண் ரசிகை இது நகைச்சுவை என குறிப்பிட்டுள்ளார்.
ராகுல்டிராவி;ட்டை அவமரியாதை செய்யவேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைசிறந்த இந்திய வீரர்களில் ஒருவரான ராகுல்டிராவிட் காணப்படுகின்றார் அவ்வாறான மற்றொரு வீரரை காணமுடியவில்லை எனமற்றொரு வீரர் பதிவு செய்துள்ளார்.
ஒருவர் ஒரு நாள் முழுவதும் விளையாடுவார் மற்றொருவர் முழு நாள் முழுவதும் மது அருந்துவார்,இருவரும் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் ஆனால் வேறு களத்தில் என வின்னு என்பவர் பதிவு செய்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM