சவூதி அரேபியா நாட்டு வான் எல்லையைப் பாதுகாக்க தென் கொரியாவிடமிருந்து ஏவுகணை தடுப்பு கவன்களை வாங்க சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் திட்டமிட்டுள்ளார்.
சவூதி அரேபியாவின் மிகப்பெரிய அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்திலுள்ள எண்ணெய் வயலை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலால் சவூதியில் தினந்தோறும் 50 சதவீதம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 57 இலட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உலகிற்கு தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய் சவூதி அரேபியாவில் உற்பத்தியாகும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலும் அதன் காரணமாக ஏற்பட்ட உற்பத்திக் குறைப்பும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் தென்கொரிய ஜனாதிபதி மூன்ஜே இன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சவூதி நாட்டு வான் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள் ளார்.
இந்த உரையாடலின் போது, எண் ணெய்க் கிடங்குகளில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் சவூதி அரேபியாவுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பிரச்சினையை உலக நாடுகள் இணைந்து தீர்க்க வேண்டும் என தென் கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேசிய முகமது பின் சல்மான், சவூதி வான் எல்லைகளை ஏவுகணைத் தாக்குதல் உட்பட அனைத்து விதமான வான்வெளி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க ஏவுகணை தடுப்பு கவன்களை தென் கொரியா வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சவூதி அரேபியாவிடமிருந்து பெட் ரோலிய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளில் தென் கொரியாவுக்கு மட்டும் ஏற்றுமதியில் சுமார் 30 சதவீதம் அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM