மின்னல் தாக்கி இரு பிள்ளைகளின் தந்தை பலி

Published By: Daya

20 Sep, 2019 | 12:07 PM
image

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெருவெட்டை வயல் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடி மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு - வாழைச்சேனை -  மீராவோடையைச் சேர்ந்த 40 வயதான முகம்மது அச்சு முகம்மது ரம்ழான் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தற்போது பெரும்போக வேளாண்மை செய்கைக்கான ஆரம்ப வேலைகள் இப்பிரதேசத்தில் இடம்பெற்றுவருவதால் தமது வயலில் உழவு வேலையில் ஈடுபட்ட உழவு இயந்திர சாரதிக்கு உணவு வழங்கச் சென்றபோது குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு மின்னல் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்தவர்இரு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் குறித்த நபரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08