பல்கலைக்கழகங்களுக்கிடையில் நடைபெற்ற வலைப் பந்தாட்டப் போட்டித் தொடரின் சம்பியன் பட்டத்தை யாழ். பல்க லைக்கழக அணி வென்றது.
13 ஆவது இலங்கை பல்கலைக் கழக விளையாட்டுப் போட்டிகளின் கீழ் நடத்தப்பட்ட வலைப்பந்துத் தொடரின் இறுதிப் போட்டி யில் கொழும்பு பல்கலைக்கழக அணியை வீழ்த்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இந்தப் போட்டித் தொடரில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவைப் பல்கலைக்கழகம் என்பன முறையே 3ஆம் மற்றும் 4ஆவது இடங்களைப் பிடித்தன.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் 25–-24 என வெற்றியீட்டியதோடு மொரட்டுவை பல்கலைக்கழகத்துக்கு எதிரான மற்றைய அரையிறுதியில் கொழும்பு பல்கலைக்கழகம் 30–-29 புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டியது.
இறுதிப் போட்டியில் யாழ். பெண்களுக்கு எதிராக கொழும்பு பல்கலைக்கழகம் கடுமையாகப் போராடிய போதும் யாழ். வீராங்கனைகள் இறுதியில் 47–-42 என்ற புள்ளிகளால் வெற்றி யீட்டிக் கொண்டனர்.
3ஆவது இடத்துக் கான போட்டி ஒரு பக்க ஆட்டமாக இருந்தது. இதில் மொரட்டுவை பல்கலைக்கழகத்துக்கு எதிராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகம் 47–--27 புள்ளிகளால் இலகு வெற்றியீட்டியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM