கணவனின் தம்பிக்கு திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றதால் கவலையடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் வேலுார் மாவட்டம், திருப்பத்தூரையடுத்துள்ள மட்றப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விஜயன் என்பவருக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன், பவித்ரா ( 22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.
விஜயன், கர்நாடக மாநிலம், பெங்களூரில் பணியாற்றி வருகிறார். மாதத்துக்கு ஒருமுறை மட்டும் ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதற்கிடையே பவித்ரா, விஜயனின் தம்பி கார்த்திக் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கார்த்திக்கிற்கு திருமணம் செய்வதற்காக, பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்ததுள்ளனர்.
இதற்கு, பவித்ரா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அடிக்கடி அவர்கள் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் பவித்ராவின் செயலை கண்டித்து தீவிரமாக கார்த்திக்கிற்கு பெண் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த பவித்ரா, வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதையடுத்து, அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டி பவித்ராவை பார்க்கச் சென்ற கார்த்திக்கை உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
படுகாயமடைந்த கார்த்திக், தர்மபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பவித்ராவின் தந்தை பாலகிருஷ்ணனின் முறைப்பாட்டையடுத்து, திருப்பத்தூர் தாலுகா பொலிஸார் வழக்குப் பதிவு செய்து பவித்ராவின் மாமனார், மாமியார் மற்றும் கணவன் விஜயன் ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM