(நா.தனுஜா)
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்பதை இவ்வார இறுதியில் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்து அறிவிப்பதற்கு எதிர்பார்ப்பதாக நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
இலங்கை தேயிலை சபையில் இன்று விசேட செய்தியாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்று எம்முடைய கட்சியில் பலர் விரும்புகின்றார்கள். எனினும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவே முன்னணியில் இருக்கின்றார். இவ்விடயத்தில் கட்சி சரியான தீர்மானமொன்றை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.
எனவே நாளை அல்லது இவ்வார இறுதியில் எம்மால் இதுகுறித்த ஒரு தீர்மானத்திற்கு வரமுடியும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து எமது வேட்பாளரைப் பெயரிடுவோம் என்றும் நம்புகிறோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM