Necrotizing Pancreatitis என்ற பாதிப்பு கணையம் அழுகிவிடும் நிலையை குறிக்கும். பக்டீரியாவின் தொற்றுகளால் கணையத்திலுள்ள திசுக்கள் இறந்துவிடும். இத்தகைய நிலை ஏற்பட்டால் கணையத்தை முழுமையாக உடலில் இருந்து அகற்றி விடுவது தான் இதற்கான சரியான தீர்வாக இருக்கும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
கணையம் என்பது வயிற்றுப்பகுதியின் பின்னால் அமைந்து, நாம் உட்கொள்ளும் உணவை செரிப்பதற்குரிய என்சைம்களை உருவாக்கி, உணவை செரிக்கவைத்து, சிறுகுடலுக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொள்கிறது.
பித்தப்பையில் கல் அடைப்பு ஏற்பட்டு, அதை குணப்படுத்த முடியாத நிலை இருந்தால் கணையம் பாதிக்கப்படும். அதேபோல் கணையத்தில் நீர்க்கட்டிகள் ஏற்பட்டிருந்தால், அதை உரிய தருணத்தில் சிகிச்சை எடுத்து, குணப்படுத்தாமல் இருந்தாலும் இத்தகைய நிலை ஏற்படும்.
அடிவயிறு வீக்கம், காய்ச்சல், வாந்தி, நீர் வறட்சி, குறைந்த இரத்த அழுத்தம், இதயத் துடிப்பில் சீரற்ற தன்மை ஆகியவை இதன் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம்.
கணையத்தில் பக்டீரியா தொற்று ஏற்பட்டு தீவிரமாகிவிட்டால் இந்த நிலை ஏற்படுகிறது. இதற்கு நோயாளியை நன்கு பரிசோதித்த பின், நாசோகாஸ்ட்ரீக் குழாயை மூக்கின் வழியாக வயிற்றுக்குள் செலுத்தி, திரவ நிலையில் உணவை உண்ண செய்வார்கள், கணையம் செய்யும் பணியை இவை மேற்கொள்ளும். வேறு சிலருக்கு கணையப் பகுதியில் இந்த பாதிப்பை ஏற்படுத்திய இறந்த திசுக்களை சத்திரசிகிச்சை மூலம் வெளியேற்றுவார்கள்.
இதனால் கணையம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிந்தால், உடனடியாக முழுமையாக பரிசோதனை செய்து, அதற்குரிய சிகிச்சை பெற்றுக்கொண்டு, ஜீரணத்திற்கு உதவும் கணையத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM