(இரா.செல்வராஜா)
நாடளாவிய ரீதியில் இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தம் இன்று காலை கைவிடப்பட்டது.
நாடு முழுவதிலும் உள்ள 80 டிப்போக்களின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டு வந்தனர். இதனால் வெளி ஊர்களுக்கு செல்லும் பிரயாணிகளே பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை , அம்பாறை , மன்னார் ,பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய தூர இடங்களுக்கான இரவு நேர பஸ் சேவைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.
வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டிருந்த ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக சபையின் தலைவர் உபாலி சமரசிங்க சம்பள நிர்ணைய சபையுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். சம்பள உயர்வு பிரச்சினைக்கு இணக்கம் காணப்பட்டது.
இது குறித்து சபையின் தலைவர் ஊழியர்களின் தொழிற் சங்கத் தலைவருக்கு அறிவித்தார்.இதனையடுத்து வேலை நிறுத்தத்தை கைவிட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர தேசிய ஊழியர்சங்க பொதுச் செயலாளர் பந்துல அத்தநாயக்க தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM