இந்தோனேசியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயால் வெளிப்பட்ட புகை அயல்நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூர்வரை பரவி வருகின்ற நிலையில் அந்தக் காட்டுத் தீயை அணைப்பதற்கு இந்தோனேசியாவுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேற்படி காட்டுத் தீயை அணைப்பதற்கு இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொண்டுள்ளதாக இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடோடோ தெரிவித்தார்.
சுமாத்ராவில் காட்டுத் தீயால் மோசமாக பாதிக்கப்பட்ட றியவு மாகாணத்திற்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தோனேசிய பொர்னியோ மற்றும் சுமாத்ரா தீவுகளில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் நடவடிக்கையில் தீயணைப்பு விமானங்கள் மற்றும் செயற்கை மழை என்பனவற்றின் உதவியுடன் பல்லாயிரக்கணக்கான தீயணைப்புப்படைவீரர்கள் போராடி வருகின்றனர்.
தீயணைப்பு நடவடிக்கையின் பொருட்டு தீ பரவி வரும் பிரதேசங்களுக்கு சுமார் 6,000 படைவீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஜொகோ விடோடோ தெரிவித்தார்.
அத்துடன் இந்தத் தீயைக் கட்டுப்படுத்த இறையருளை வேண்டி பிரார்த்தனைகளும் இடம்பெற்று வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM