பயங்கரவாதிகளின் வட்ஸ் அப், வைபர், டெலிகிராம் தகவல்கள் சி.ஐ.டி.க்கு: தொடரும் தீவி­ர­மான விசா­ர­ணைகள்

Published By: J.G.Stephan

19 Sep, 2019 | 12:13 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

21/4 உயிர்த்த  ஞாயிறு  தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களை ஐ.எஸ். ஐ.எஸ். சர்­வ­தேச பயங்­கர­வா­திகள் முன்­னெ­டுத்­த­தாக சித்­தரிக்க, விஷேட வலை­ய­மைப்பு ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில்,  ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பு­பட்ட சந்­தேகநபர்கள் பயன்­ப­டுத்­தி­யுள்ள வட்ஸ்அப், வைபர் மற்றும் டெலி­கிராம் தக­வல்­களை சி.ஐ.டி. பெற்­றுக்­கொண்­டுள்­ளது.

சர்­வ­தேச பொலிஸார் மற்றும்  சர்­வ­தேச விசா­ரணை அமைப்­புக்­களின் உத­வி­யுடன் அந்த தக­வல்­களைப் பெற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும், அதன் ஊடாக  பயங்­க­ர­வா­தி­களின் ஏனைய திட்­டங்கள் தொடர்பில் விஷேட விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­டு­வ­தா­கவும்  கோட்டை நீதி­வா­னுக்கு நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

 குற்றப் புல­னாய்வுப் பிரிவின்  விஷேட விசா­ரணைப் பிரிவு அறை இலக்கம் 4 இன் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் கீர்த்­தி­சிங்க இதனை நீதி­வா­னுக்கு விஷேட  அறிக்கை ஊடாக அறி­வித்தார். இந்நிலையில் தற்­கொலை தாக்­கு­தல்­களை ஐ.எஸ்.ஐ.எஸ். சர்­வ­தேச பயங்­க­ர­வா­திகள் முன்­னெ­டுத்­த­தாக சித்­த­ரிக்க நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­தாக கூறப்­படும்  தடை செய்­யப்­பட்ட தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின்  உறுப்­பினர் அஹ­மது மொஹ­மது அர்­ஷாத்தின் விளக்­க­ம­றி­யலை எதிர்­வரும் ஒக்­டோபர் 2 ஆம் திக­தி­வரை நீதிவான் நீடித்தார்.

கொழும்பு கிங்ஸ்­பெரி ஹோட்­டலில் நடத்­தப்­பட்ட தற்­கொலை தாக்­குதல்  விவ­கார விசா­ர­ணை­களின்போது சந்­தேக நபர் தொடர்பில் தகவல் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ்  கைது செய்­யப்­பட்டு தடுத்து வைத்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட நிலையில் சந்­தேக நபர் கடந்த ஒரு வாரத்­துக்கு முன்னர் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு நேற்றுவரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்தார்.  இந்நிலை­யி­லேயே நேற்று அவர்  நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்  செய்­யப்­பட்டபோதே இவ்­வாறு விளக்­க­ம­ற­ியலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது.

அஹ­மது முஹம்­மது அர்ஷாத் எனும் குறித்த சந்­தேக நபர்,  தற்­போதும் சி.ஐ.டி. பொறுப்பில் விசா­ரிக்­கப்­பட்­டு­வரும்  தேசிய தெளஹீத் ஜமாஅத் உறுப்­பினர்  பஸ்ஹுல் சஹ்ரான் எனும் சந்­தேகநபரின் ஆலோ­ச­னைக்கு அமைய, இந்த தாக்­கு­தல்­களை ஐ.எஸ்.ஐ.எஸ்.  அமைப்பின் தாக்­கு­த­லாக சித்­தரிக்க, யாரும் ஊட­றுத்து கேட்க முடி­யாத விசேட வலை­ய­மைப்­பொன்றின்  ஊடாக  நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக சி.ஐ.டி.யினர் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

 குறித்த சந்­தேக நபரை கடந்த ஒரு மாதத்­துக்கு முன்னர் காத்­தான்­குடி பகு­தியில் வைத்து இரா­ணுவ புல­னாய்வுப்  பிரி­வினர் கைது செய்து விசாரணைகளுக்காக சி.ஐ.டி.யிடம் கையளித்துள்ளனர்.  அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர் விசேட வலையமைப்பு ஊடாக ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்புடன்  தொட ர்புகளைக் கொண்டிருந்துள்ளமை வெளிப் படுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யின் அறி க்கை ஊடாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது சமூகம் கட்டுக்கோப்புடன் வாழ அடித்தளம்...

2025-02-13 15:46:20
news-image

ராகமவில் ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-02-13 15:33:30
news-image

வட மாகாணத்தில் சுகாதார சேவைகளை வலுப்படுத்த...

2025-02-13 15:36:23
news-image

ரஸ்ய உக்ரைன் யுத்தம் ஆரம்பமாகி மூன்று...

2025-02-13 15:15:29
news-image

நாட்டில் 2,000 வைத்தியர்கள் சுகாதார சேவையிலிருந்து...

2025-02-13 15:30:19
news-image

ஊடகவியலாளர் லசந்த படுகொலை : 3...

2025-02-13 14:49:33
news-image

மீகொடையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் உப பொலிஸ்...

2025-02-13 14:48:25
news-image

காற்றாலை மின்திட்டத்திலிருந்து விலகல் - அதானி...

2025-02-13 14:33:51
news-image

கத்தி முனையில் மிரட்டிய பாதுகாப்பு உத்தியோகத்தர்...

2025-02-13 14:06:19
news-image

பொலிஸ் அதிகாரியின் காதை கடித்து காயப்படுத்திய...

2025-02-13 14:56:50
news-image

கைவிடப்பட்ட நிலையில் கடுகண்ணாவை புகையிரத அருங்காட்சியகம்

2025-02-13 14:55:22
news-image

ரிதியாகம பூங்காவில் 6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர்சூட்டப்பட்டது

2025-02-13 13:29:21