பயங்கரவாதிகளின் வட்ஸ் அப், வைபர், டெலிகிராம் தகவல்கள் சி.ஐ.டி.க்கு: தொடரும் தீவி­ர­மான விசா­ர­ணைகள்

Published By: J.G.Stephan

19 Sep, 2019 | 12:13 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

21/4 உயிர்த்த  ஞாயிறு  தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களை ஐ.எஸ். ஐ.எஸ். சர்­வ­தேச பயங்­கர­வா­திகள் முன்­னெ­டுத்­த­தாக சித்­தரிக்க, விஷேட வலை­ய­மைப்பு ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில்,  ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பு­பட்ட சந்­தேகநபர்கள் பயன்­ப­டுத்­தி­யுள்ள வட்ஸ்அப், வைபர் மற்றும் டெலி­கிராம் தக­வல்­களை சி.ஐ.டி. பெற்­றுக்­கொண்­டுள்­ளது.

சர்­வ­தேச பொலிஸார் மற்றும்  சர்­வ­தேச விசா­ரணை அமைப்­புக்­களின் உத­வி­யுடன் அந்த தக­வல்­களைப் பெற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும், அதன் ஊடாக  பயங்­க­ர­வா­தி­களின் ஏனைய திட்­டங்கள் தொடர்பில் விஷேட விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­டு­வ­தா­கவும்  கோட்டை நீதி­வா­னுக்கு நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

 குற்றப் புல­னாய்வுப் பிரிவின்  விஷேட விசா­ரணைப் பிரிவு அறை இலக்கம் 4 இன் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் கீர்த்­தி­சிங்க இதனை நீதி­வா­னுக்கு விஷேட  அறிக்கை ஊடாக அறி­வித்தார். இந்நிலையில் தற்­கொலை தாக்­கு­தல்­களை ஐ.எஸ்.ஐ.எஸ். சர்­வ­தேச பயங்­க­ர­வா­திகள் முன்­னெ­டுத்­த­தாக சித்­த­ரிக்க நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­தாக கூறப்­படும்  தடை செய்­யப்­பட்ட தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின்  உறுப்­பினர் அஹ­மது மொஹ­மது அர்­ஷாத்தின் விளக்­க­ம­றி­யலை எதிர்­வரும் ஒக்­டோபர் 2 ஆம் திக­தி­வரை நீதிவான் நீடித்தார்.

கொழும்பு கிங்ஸ்­பெரி ஹோட்­டலில் நடத்­தப்­பட்ட தற்­கொலை தாக்­குதல்  விவ­கார விசா­ர­ணை­களின்போது சந்­தேக நபர் தொடர்பில் தகவல் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ்  கைது செய்­யப்­பட்டு தடுத்து வைத்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட நிலையில் சந்­தேக நபர் கடந்த ஒரு வாரத்­துக்கு முன்னர் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு நேற்றுவரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்தார்.  இந்நிலை­யி­லேயே நேற்று அவர்  நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்  செய்­யப்­பட்டபோதே இவ்­வாறு விளக்­க­ம­ற­ியலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது.

அஹ­மது முஹம்­மது அர்ஷாத் எனும் குறித்த சந்­தேக நபர்,  தற்­போதும் சி.ஐ.டி. பொறுப்பில் விசா­ரிக்­கப்­பட்­டு­வரும்  தேசிய தெளஹீத் ஜமாஅத் உறுப்­பினர்  பஸ்ஹுல் சஹ்ரான் எனும் சந்­தேகநபரின் ஆலோ­ச­னைக்கு அமைய, இந்த தாக்­கு­தல்­களை ஐ.எஸ்.ஐ.எஸ்.  அமைப்பின் தாக்­கு­த­லாக சித்­தரிக்க, யாரும் ஊட­றுத்து கேட்க முடி­யாத விசேட வலை­ய­மைப்­பொன்றின்  ஊடாக  நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக சி.ஐ.டி.யினர் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

 குறித்த சந்­தேக நபரை கடந்த ஒரு மாதத்­துக்கு முன்னர் காத்­தான்­குடி பகு­தியில் வைத்து இரா­ணுவ புல­னாய்வுப்  பிரி­வினர் கைது செய்து விசாரணைகளுக்காக சி.ஐ.டி.யிடம் கையளித்துள்ளனர்.  அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர் விசேட வலையமைப்பு ஊடாக ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்புடன்  தொட ர்புகளைக் கொண்டிருந்துள்ளமை வெளிப் படுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யின் அறி க்கை ஊடாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13