தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு உரிய ஊதியம் வழங்கும் வரை அவர்­க­ளது கண்ணீர் நாட்டை அரிக்கும்: டக்ளஸ்

Published By: J.G.Stephan

19 Sep, 2019 | 11:25 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மலை­யகத் தோட்­டத்­தொ­ழி­லாளர்­களின் ஊதியம் தொடர்­பி­லான பிரச்­சி­னை­களில் அம்­மக்­களின்  உழைப்­புக்­கேற்ற ஊதியம் வழங்­கப்­படும் வரையில் அம்­மக்­க­ளது கண்ணீர் இந்த நாட்டை அரித்துக் கொண்டே இருக்கும் என்­பதில் ஐய­மில்லை என்று ஈழ மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் செய­லாளர் நாயகம் டக்ளஸ் தேவா­னந்தா தெரி­வித்­துள் ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற  ஸ்ரம வாசனா எனப்­ப­டு­கின்ற உழைப்பு அதிர்ஷ்ட நிதியம், சம்­பளச் சபைகள் திருத்தச் சட்­ட­மூலம் மற்றும் தொழிற்­சா­லைகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழான கட்­ட­ளைகள் தொடர்­பான விவா­தத்தில் கலந்து கொண்டு   உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,இந்த நாட்டின் தொழி­லா­ளர்கள் தொடர்பில் கதைக்­கின்­ற­போது முக்­கி­ய­மாக இரு துறைகள் சார்ந்த உழைப்­பா­ளர்கள் தொடர்­பி­லான பிரச்­சி­னை­களே மிக அதி­க­ளவில் முன்­னணி வகிப்­ப­தாகக் கூற முடியும். ஒன்று, மலை­யகத் தோட்­டத்­துறை சார்ந்த உழைப்­பா­ளர்­க­ளது பிரச்­சி­னைகள்.

இரண்­டா­வது சுதந்­திர வர்த்­தக வலய ஆடைத் தொழிற்­சா­லைகள் சார்ந்த பெண் உழைப்­பா­ளர்­க­ளது பிரச்­சி­னைகள். இந்த இரு துறை­களும் இன்று இந்த நாட்டின் பொரு­ளா­தா­ரத்தின் மிக முக்­கி­ய­மான துறை­க­ளாக விளங்­கு­கின்­றன.

மலை­யகத் தோட்­டத்­துறை தொழி­லா­ளர்­க­ளது ஊதியப் பிரச்­சினை என்­பது, ஏதோ வலுக்­கட்­டா­ய­மாக வழங்­கப்­ப­டு­கின்ற நிவா­ர­ணங்­களைப் போன்று அல்­லது கப்பம் செலுத்த வேண்­டி­யி­ருப்­ப­தைப் ­போன்று நிர்­வாகத் தரப்­பி­னரால் கையா­ளப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது.

உண்­மை­யி­லேயே அம் மக்கள் உங்­க­ளி­ட­மி­ருந்து நிவா­ர­ண­மா­கவோ அல்­லது கப்­ப­மா­கவோ இந்த ஊதிய உயர்­வை எதிர்­பார்க்­க­வில்லை. அவர்­க­ளது உழைப்­பிற்­கேற்ற ஊதி­யத்­தையே எதிர்­பார்க்­கின்­றனர். அதைக்­கூட உயர்த்­து­வ­தற்கு வருடக் கணக்கில் பேச்­சு­வார்த்­தை­களை நடத்திக் கொண்டு, இழுத்­த­டித்து வரு­கின்ற நிலையே இன்­னமும் தொடர்­கின்­றது.

இந்த மக்கள் தேயிலைக் கொழுந்தில் விரல்­களை வைக்­கா­விட்டால் இந்த நாட் டின் பொரு­ளா­தா­ரமே தேய்ந்­து­விடும் என்­பது தெரிந்தும், மிகச் சுல­ப­மாக அம்­மக்­களை ஏமாற்றி வரு­வ­தற்கு, தோட்ட நிர்­வா­கங்­களும், மறு­ பக்­கத்தில் அம்­மக்­க­ளது சந்தாப் பணங்­களில் செயற்­ப­டு­கின்ற சில தொழிற் சங்­கங்­களும் செயற்­பட்டு வரு­வ­தா­னது மிகவும் வேத­னை­யான விட­ய­மாகும் என்­பதை இங்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன்.

இத்­த­கைய நிலையில் மலை­யக தோட்டத் தொழி­லாளர் மக்­க­ளது ஊதி­யத்­துடன் ஐம்­பது ரூபாவை அதி­க­ரிப்­ப­தற்­கான முயற்­சிகள் வாய்­ மூ­ல­மாகத் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதற்கு அமைச்­ச­ரவை அனு­மதி கிடைத்­தது எனவும் கூறப்­பட்­டது.

இந்த ஐம்­பது ரூபா பற்றி பலரும் வான­ள­வாகப் புகழ்ந்து வேதம் ஓதிக் கொண்டும் இருந்­தனர். இருந்தும், இன்று வரையில் அது சாத்­தி­ய­மா­க­வில்லை. இந்த நாட்டின் பொரு­ளா­தா­ரத்தின் முது­கெ­லும்­பான இந்தத் தொழி­லாள மக்­க­ளுக்கு ஒரு ஐம்­பது ரூபா­வை­யேனும் வழங்க முடி­யாமல், அம்­மக்­களைக் கட்­டி­யெ­ழுப்­புவோம், தூக்கி நிறுத்­துவோம் என வெறும் வாயால் கதை­களை அளந்து கொண்­டி­ருப்­பது வெட்­க­மாக இல்­லையா எனக் கேட்கத் தோன்­று­கின்­றது.

அத்­துடன், மேற்­படி தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வரு­கின்ற மிகவும் குறை­வான நாளாந்தச் சம்­ப­ளங்­களும் வெட்­டப்­ப­டு­கின்ற நிலையும் தொடர்­கின்­றன. குறிப்­பாக, பணிக்குத் தாம­த­மாக வருதல், நாள் ஒன்­றுக்குப் பறிக்­கப்­பட வேண்­டிய கொழுந்தின் அளவு குறைந்­தி­ருத்தல் போன்ற கார­ணங்­களை முன்­வைத்து பல தோட்ட நிர்­வா­கங்கள் இந்தச் செயற்­பாட்­டை முன்­னெ­டுத்து வரு­வ­தாகத் தெரிய வரு­கின்­றது. இத்­த­கைய செயற்­பா­டுகள் பல கால­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும், இலங்­கையின் சில பெருந்­தோட்­டங்­களில் தொழி­லா­ளர்­க­ளது சம்­ப­ள­மா­னது சட்­ட­வி­ரோ­த­மான முறையில் பல்­வேறு கார­ணங்­களை முன்­னி­றுத்தி வெட்­டப்­ப­டு­வ­தாக தொம்சன் ரொய்டர்ஸ் பவுண்­டேஷன் அமைப்பு  தக­வல்­களை வெளி­யிட்­டி­ருந்­தது.

அத்­துடன், இந்தச் சம்­பள வெட்டு விட­ய­மா­னது இலங்­கையின் கைத்­தொழில் பிணக்குச் சட்டம், சம்­பள நிர்­ணய சபையின் கட்­டளைச் சட்டம், பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்கள் சட்டம் உட்­பட பல்­வேறு தொழி­லாளர் சட்­டங்­களை மீறு­ப­வை­யாக உள்­ள­தா­கவும் இலங்­கையின் சட்­டத்­துறை சார்ந்த பலரும் சுட்­டிக்­காட்டி இருக்­கின்­றனர்.

இத்­த­கைய பல்­வேறு பாதிப்­பு­களை தங்­க­ளது கடின உழைப்பின் முன்னால் எதிர்­நோக்கி இருக்­கின்ற மலை­யகத் தோட்டத் தொழி­லாள மக்­களின் ஊதியம் தொடர்­பி­லான பிரச்­சி­னைகள்–அதா­வது அம்­மக்­க­ளது உழைப்­புக்­கேற்ற ஊதியம் வழங்­கப்­படும் வரை, தீர்க்கப்படும் வரையில் அம் மக்களது கண்ணீர் இந்த நாட்டை அரித்துக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றே கூற வேண்டியிருக்கின்றது.

உயர்ந்த இடங்களில் குடியமர்ந்திருந்தாலும் இம் மக்களது வாழ்க்கை நிலைமைகள் இன்னும் உயர்த்தப்படவில்லை என்பதை உணர்ந்து, அம் மக்களையும் இந்த நாட்டின் ஏனைய சமூக மக்களைப் போன்று அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் சமநிலைப் படுத்துவதற்கான ஏற்பாடுகள் அவசியம் என்பதையே நான் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21