(ரொபட் அன்டனி)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஜனாதிபதி பதவிக்காலம் எப்போது தொடங்கி எப்போது முடிவடையவுள்ளது என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்திடம் சட்ட அபிப்பிராயம் ஒன்றை கோருவதற்கான மனுவை சில தினங்களில் உயர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பினர் கடந்த சில தினங்களாக சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் ஆலோசனை நடத்திவருவதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
அதாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்றார். இந்நிலையில் 19 ஆவது திருத்த சட்டம் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதன்பின்னர் சில வாரங்களில் சபாநாயகரின் கையொப்பமிடப்பட்டது.
அதன்பின்னரே 19ஆவது திருத்த சட்டம் அமுலுக்கு வந்தது. 19ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டது.
எனினும் தான் 19ஆவது திருத்த சட்டம் அமுலுக்கு வரும் முன்னரே ஜனாதிபதியாக பதவியேற்றதால் தான் எத்தனை வருடங்கள் பதவி வகிக்க முடியும் என்பதை ஏற்கனவே ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் கோரியிருந்த நிலையில் ஐந்து வருடங்களே பதவி வகிக்க முடியும் என உயர் நீதிமன்றம் சட்ட வியாக்கியானம் அளித்திருந்தது.
இந்த நிலையிலேயே தற்போது தனது பதவிக்காலம் ஐந்து வருடங்களாயின் அது எப்போது ஆரம்பித்து எப்போது முடிவடையும் என்பது தொடர்பாகவே ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் சட்ட அபிப்பிராயத்தை கோரவுள்ளதாக அறியமுடிகின்றது.
அதாவது 19ஆவது திருத்த சட்டம் அமுலுக்கு வந்த தினத்திலிருந்து தனது பதவிக்காலம் ஆரம்பிக்குமாயின் இன்னும் சில மாதங்கள் தான் பதவி வகிக்க முடியுமா என்பது என்பது ஜனாதிபதி தரப்பினரின் வாதமாக இருக்கின்றது.
இந்த நிலையிலேயே ஜனாதிபதி தரப்பு இந்த சட்ட விளக்கத்தை உயர்நீதிமன்றத்திடம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் எப்போது ஜனாதிபதி தரப்பு இதுதொடர்பான கோரிக்கையை முன்வைக்கும் என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை. எனினும் சில தினங்களில் ஜனாதிபதி தரப்பு இந்த விளக்கத்தை உயர்நீதிமன்றத்திடம் கோரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் ஜனாதிபதி தரப்பினர் இவ்வாறு மீண்டும் ஒருமுறை சட்ட அபிப்பிராயத்தை கோருவது அவசியமற்ற விடயம் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றத்தில் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.
ஏழு எம்.பிக்கள் அன்றையதினம் சபைக்கு சமுகமளித்திருக்கவில்லை. அத்துடன் ஒருவர் 19 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்ததுடன் மற்றுமொரு எம்.பி. நடுநிலைவகித்திருந்தார். ஆறு வருடங்களாக இருந்த ஜனாதிபதியின் பதவிக்காலம் இந்த 19ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டது.
அந்த வகையிலேயே தனது பதவிக்காலம் ஐந்து வருடங்களா? அல்லது ஆறு வருடங்களா? என்பதை முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திடம் வினவியிருந்தார். அப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து வருடங்களே என சட்ட வியாக்கியானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM