(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரமுனவின் சின்னத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் சுதந்திர கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடு க்க வேண்டிய தேவை ஏதும் கிடையாது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், கொள்கைத்திட்டங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.
சுதந்திர கட்சி கூட்டணியின் ஊடாக இணைந்ததன் பின்னர் பொதுத்தேர்தலின் போது நிச்சயம் சின்னம் குறித்து கவனம்செலுத்தப்படும். அதில் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்து பட்ட கூட்டணி அமைத்தல் விவகாரம் வெற்றிப் பெறும் தருவாயில் காணப்படுகின்றது. பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்று சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளமை கவனித்தக்கது.
நாட்டு மக்கள் உட்பட அரசியல்வாதிகளின் கவனம் அனைத்தும் தற்போது ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டுள்ளது என்பதை சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் புரிந்துக் கொள்ள வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் தற்போது சின்னம் குறித்து கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏதும் கிடையாது. ஜனாதிபதி வேட்பாளர் யார், முன்வைக்கப்படும் கொள்கைத்திட்டங்கள்ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் செலுத்தப்படும். இவ்விரண்டும் தற்போது பொதுஜன பெரமுனவினால் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியில் இணைந்தவுடன் இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலின் போது மொட்டு சின்னத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் நிச்சயம் அக்கோரிக்கை பரசீலனை செய்யப்படும். பொதுத்தேர்தலில் சின்னங்களில் மாற்றம் ஏற்படுத்துவது சாதாரண விடயமாகும்.ஆகவே இந்த விடயத்தில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்னும் 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.அரசியல் களத்தில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை எதிர்க்க முடியாதவர்கள் முறையற்ற விதத்தில் புதிய குற்றச்சாட்டுக்களை தற்போது முன்வைக்க ஆரம்பித்து விட்டார்கள். கடந்த நான்கு வருட காலமாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஏதும் இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை. ஆகவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கல் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையாகாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM