பாக்கிஸ்தானிற்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ள இலங்கை வீரர்களிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஜாவிட் மியன்டாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் தொடர்களை விட உலகநாடுகளில் இடம்பெறும் லீக் போட்டிகளிற்கு முன்னுரிமை வழங்கும் வீரர்களை இலங்கை தண்டிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளே வீரர்களின் மிகவும் முன்னுரிமைக்குரிய விடயமாக அமையவேண்டும் என தெரிவித்துள்ள மியன்டாட் பாக்கிஸ்தான் தொடரிலிருந்து விலகிய வீரர்களை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தண்டிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தானிற்கு இலங்கையின் முக்கிய வீரர்கள் விஜயம் மேற்கொள்ளவில்லை என்பது குறித்து பாக்கிஸ்தான் வீரர்கள் சிந்திக்கவேண்டிய அவசியமில்;லை அவர்கள் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியுடனான தொடர் பாக்கிஸ்தான் தனது எதிர்கால சர்வதேச போட்டிகளை சிறந்த முறையில் ஆரம்பிப்பதற்கு உதவும் எனவும் மியன்டாட் தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தானின் துடுப்பாட்டவீரர்கள் சதம் பெறும் ஒவ்வொரு முறையும் அதனை இரட்டை சதமாக மாற்ற முயலவேண்டும்,இது அவர்களின் மனோநிலையை வலுப்படுத்த உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM