பொதுமக்களின் முறைப்பாட்டினை அடிப்படையாக கொண்டு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 14 உணவகங்களுக்கு சாவகச்சேரி பொதுசுகாதார பரிசோதகர்கள் இன்று (16) திடீர் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டனர்.
தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையின் போது சட்டத்திற்கமைவாக உணவகங்கள் இயங்குகின்றனவா என்பதுடன் உணவகங்களின் தரம் தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது 11 உணவகங்கள் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்டதுடன் உணவு தயாரிக்கும் பகுதிகள் மிகவும் சுத்தமற்று காணப்பட்டன. இவற்றில் அதிகளவிலான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 04 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும் 2 உணவங்களில் காணப்பட்ட தகுதியற்ற உணவுகள் அழிக்கப்பட்டதுடன் , ஏனைய உணவகங்களை மிகவும் தகுதிவாய்ந்த உணவகங்களாக மாற்றியமைப்பதற்கான கால அவகாசம் சாவகச்சேரி பொதுசுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டது.
குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்ற தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுசுகாதார அதிகாரிகளினால் உணவக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் ஒரு உணவு மருந்து பரிசோதகருடன் ஆறு பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM