ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சபாநாயகர் தேசபந்து கரு ஜயசூரியவைக் களமிறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று முன்தினம் அலரி மாளிகையில் சந்தித்த பௌத்த தேரர்கள் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் யோசனையை முன்வைத்து சபாநாயகர் கருஜயசூரியாவை வேட்பாளராக நியமித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரச்சாரத்தை வழிநடத்த வேண்டும் என்று மாத்தளை தம்ம குசல அனுநாயக்க தேரர் இந்தச் சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளார். 
ஜனாதிபதி வேட்பாளராக கரு ஜயசூரியவை நியமித்தால், அவருக்கு ஆசீர்வாதம் வழங்குவதற்கான பகிரங்க நிகழ்வொன்றையும் தலைமைப் பிக்குகளின் வழிநடத்தலின் கீழ் நடத்தவும் தயாராக இருக்கின்றோம் என்ற செய்தியையும் பிரதமரிடம் தலைமைப் பிக்குகள் வழங்கியுள்ளனர்.
இதனிடையே சிவில் செயற்பாட்டார்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள், புத்திஜீவிகள் ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து வேட்பாளர் நியமனத்திலுள்ள இழுபறி நிலைக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM