நடுவீதியில் வைத்து குடும்பத்தலைவரை தாக்கிய பொலிஸார்

Published By: Digital Desk 4

15 Sep, 2019 | 07:23 PM
image

மோட்டார் சைக்கிளில் சேலை சிக்குண்டுதால் மனைவி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் அவரை ஏற்றிச் சென்ற கணவரை நடுவீதியில் வைத்து வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் இடம்பெற்றது.

வட்டுக்கோட்டையிலிருந்து மனைவியை ஏற்றிக்கொண்டு இளம் குடும்பத்தலைவர் சித்தன்கேணிக்கு பயணித்துள்ளார். சங்கரத்தைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சேலை சிக்குண்டு மனைவி விபத்துக்குள்ளாகியுள்ளார். தலையில் படுகாயமடைந்த மனைவியை அம்புயூலன்ஸ் வண்டியில் தெல்லிப்பளைக்கு அனுப்பிவைத்த குடும்பத்தலைவர் தானும் வைத்தியசாலைக்குச் செல்ல முற்பட்டுள்ளார்.

வீதியில் பயணித்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதாகத் தெரிவித்துள்ளனர். அதனால் விபத்துக்குள்ளான குடும்பத்தலைவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பொலிஸ் நிலையம் எடுத்துச் செல்லத் தருமாறு கேட்டுள்ளனர்.

தான் மனைவியைப் பார்க்க வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும் என்பதால், சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்திருக்க அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். எனினும் பொலிஸார் அதற்கு மறுத்தததுடன், குடும்பத்தலைவருக்கு கைவிலங்கிட்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

பொலிஸாரின் இந்தச் செயலைக் கண்டவர்கள், குடும்பத்தலைவரைத் தாக்கவேண்டாம் என்று கேட்டதுடன், அவரிடமிருந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கிப் பொலிஸாரிடம் வழங்கியுள்ளனர்.

குடும்பத்தலைவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தையும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் எடுத்துச் சென்றனர்.

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் வீடு கொடுத்து தங்க வைக்கப்பட்டுள்ள சிங்கள பொலிஸ் உத்தியோகத்தரே இந்த அடாவடியில் ஈடுபட்டார் என்று அங்கு நின்றவர்களால் விசனம் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் கையூட்டுப் பெற்றுக்கொள்வதாகவும் மறுப்பவர்களை வயல் வெளிக்கு அழைத்துச் சென்று அச்சுறுத்துவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45