வெற்றிடமாக உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டாரவை நியமித்து, தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சாலிந்த திஸாநாயக்க அண்மையில் உடல் நல குறைவினால் உயிரிழந்தார்.
இதனையடுத்து அந்த இடத்திற்கு எச்.எம்.டி.பி. ஹேரத்தை நியமிக்க குருணாகல் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நடவடிக்கை எடுத்திருந்தார்.
இது தொடர்பான அறிவிப்பு கடந்த 9ஆம் திகதி வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு சட்டத்திற்கு முரணானது என சாந்த பண்டார கூறியிருந்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சாந்த பண்டார, வெற்றிடமாக உள்ள உறுப்பினர் பதவியை பெறும் நோக்கில், தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM