ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் அமைச்சர் சஜித் பிரேமதாச தரப்பினருடான முக்கிய கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு தீர்க்கமான முடிவுகளை எட்டியதாக அமைச்சர் மனோகேணசன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலானது நேற்றிரவு நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் சம்பிக ரணவக (ஜாதிக ஹெல உருமய), மனோ கணேசன், பழனி திகாம்பரம் (த.மு.கூ.), ரவுப் ஹக்கீம், நிசாம் காரியப்பர் (ஸ்ரீ.மு.கா), ரிசாத் பதுதீன் (அ.இ.ம.கா), சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹசிம், எரான் விக்கிரமரத்ன (ஐ.தே.க) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஐக்கிய தேசிய முன்னணி சார்பான ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தை அடுத்த வாரத்துக்கு மேல் இழுத்தடிக்க ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என்பது உட்பட பல முக்கிய முடிவுகள் இதன்போது எட்டப்பட்டன.
அத்துடன் இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சஜித் பிரேமதாச தரப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் சந்திப்பு முடிவுபெறும் வரை நேற்றைய கலந்துரையாடலில் இடம்பெற்ற முடிவுகள் தொடர்பில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்போவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM