கர்ப்ப காலத்தில் கண்­ட­றி­யப்­படும் சூலகக் கட்­டி­களும் அவற்­றுக்­கான தீர்­வு­களும்.!

Published By: Robert

17 May, 2016 | 09:15 AM
image

பெண்­களில் கர்ப்­பப்பை தொடர்­பான கட்­டிகள் என­கின்ற போது கர்ப்­பப்­பையில் தோன்றும் பைபு­ரோயிட் (Fibroid) கட்­டிகள், கர்ப்­பப்­பையின் இரு­பு­றங்­க­ளி­லு­முள்ள சூல­கங்­களில் ஏற்­படும் சூலகக் கட்­டிகள் (Ovarian Cysts) என்­பன அடங்கும்.

இவ்­வா­றான கட்­டிகள் உள்­ள­போது கர்ப்­பந்­த­ரித்­தாலோ அல்­லது கர்ப்­ப­மாக உள்­ள­போது இவ்­வா­றான கட்­டிகள் கண்­ட­றி­யப்­பட்­டாலோ மக்கள் மத்­தியில் பெரிய ஒரு பயம் ஏற்­ப­டு­வது வழக்கம். அதா­வது கர்ப்­பப்­பையில் கரு வள­ரும்­போது கட்­டியும் சேர்ந்து வளர்ந்து தாயின் உடல் நலத்­திற்கோ அல்­லது குழந்­தையின் ஆரோக்­கி­யத்­திற்கோ தீங்கை ஏற்­ப­டுத்­து­மென ஏங்­கு­வது வழக்கம். அத்­துடன் இவ்­வா­றான கட்­டிகள் கண்­ட­றி­யப்­ப­டும்­போது இதற்­கான சரி­யான தீர்­வுகள் என்ன? இதனை எவ்­வாறு கையாள வேண்டும் என்­பன குறித்து மக்கள் மத்­தியில் குழப்ப நிலை ஏற்­பட வாய்ப்­புள்­ளது.

ஆகவே இதற்­கு­ரிய சரி­யான விளக்­கங்­களை உங்­க­ளுடன் பகிர்ந்து கொள்­ளவும் சரி­யான தீர்­வுக்­கு­ரிய பாதையில் உங்­களை வழி­ந­டத்­து­வதும் மருத்­துவத் துறை­யி­ன­ரான எம் கடமை. இதன்­போது தான் இதற்­கான தீர்­வு­களை மருத்­து­வத்­து­றை­யினர் சிபா­ரிசு செய்­யும்­போது அவற்றைப் புரிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

கர்ப்ப காலத்தில் சூலகக் கட்­டிகள் கண்­ட­றி­யப்­பட்டால்

(Ovarian, Cysts) அவற்­றுக்­கான தீர்­வுகள்:

கர்ப்ப காலத்தில் நாம் சாதா­ரண தேவை­க­ளுக்­காக ஸ்கான் (Scan) பரி­சோ­தனை செய்­யும்­போது சூலகக் கட்­டிகள் கண்­ட­றி­யப்­படும்.

வேறு சில சந்­தர்ப்­பங்­களில் கர்ப்ப காலத்தில் அசா­தா­ரண வயிற்று வலியைப் பெண்­ணொ­ருவர் கூறும்­போது நாம் அதற்­கான கார­ணங்­களை கண்­ட­றியும் பரி­சோ­த­னைகள் மற்றும் ஸ்கான் என்­பன செய்யும் போது சூலகக் கட்­டிகள் அறி­யப்­ப­டு­வது வழக்கம்.

இவ்­வா­றான சூல­கக்­கட்­டி­களில் பெரும்­பா­லா­னவை சாதா­ரண நீர்க் கட்­டி­க­ளா­கவும் சிறிய பருமன் அல்­லது ஒரு தேசிக்­காயின் பருமன் கொண்­ட­ன­வா­கவும் காணப்­படும். இவற்­றுக்கு மேல­தி­க­மான சிகிச்­சைகள் எதுவும் தேவைப்­ப­டு­வ­தில்லை. ஏனெனில் சில மாதங்­களில் இவை தாமா­கவே மறைந்­து­விடும். ஆனால் சற்றுப் பெரிய பரு­ம­னு­டைய சூலகக் கட்­டிகள் அதா­வது ஒரு தோடம்­ப­ழத்தின் அளவு அல்­லது பெரிய அளவில் கண்­ட­றி­யப்­பட்டால் அவை வயிற்று வலியைத் தோற்­று­விக்கும். அத்­துடன் அவை மேலும் வள­ரு­கின்­ற­னவா என்­ப­தனை ஓரிரு மாத இடை வெளியில் மீண்டும் செய்யும் ஸ்கான் பரி­சோ­த­னையில் கண்­ட­றி­யலாம். இவ்­வாறு மேலும் வள­ரு­கின்ற கட்­டி­க­ளுக்கும் வயிற்று வலியைத் தோற்­று­விக்கும் சூலகக் கட்­டி­க­ளுக்கும் சிகிச்­சை­யாக சத்­திர சிகிச்­சைகள் மேற்­கொள்ள வேண்­டி­யது அவ­சியம்.

கர்ப்ப காலத்தில் இவ்­வா­றான சூலகக் கட்­டி­க­ளுக்கு சத்­திர சிகிச்­சைகள் மேற்­கொள்­ளும்­போது கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்­களில் சத்­திர சிகிச்­சைகள் மேற்­கொள்­வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த முதல் 3 மாதங்­களில் சத்­திர சிகிச்­சை­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்தும் மயக்க மருந்­து­களின் தாக்கம் சிசுவைக் கூடு­த­லாகப் பாதிக்கும் என்­பதால் இந்தக் காலப்­ப­கு­தியில் இவற்றைக் கூடு­த­லாகத் தவிர்க்­கிறோம். எனவே இவ்­வா­றான சத்­திர சிகிச்­சை­களை 4/5 மாத காலப் பகு­தியில் மேற்­கொள்ள முடியும்.

இந்தக் கட்­டிகள் வள­ராது, எவ்­வித வயிற்று வலி­யையும் தோற்­று­விக்­காது மற்றும் ஸ்கான் பரி­சோ­த­னையில் எவ்­வித ஆபத்­து­க­ளு­மற்ற நீர்க் கட்­டிகள் என கண்­ட­றி­யப்­ப­டும்­போது கர்ப்ப காலத்தில் எவ்­வித சிகிச்­சை­க­ளையும் மேற்­கொள்­ளாது பிர­ச­வத்தை நிறைவு செய்து அதன் பின் மேலும் 3 மாதங்­களின் பின் இக் கட்­டிகள் தொடர்­பாகப் பரி­சீ­லித்து அவை தொடர்­பான சிகிச்­சை­களை முன்­வைக்க முடியும்.

கர்ப்ப காலத்தில் சூலகக் கட்­டிகள் உள்­ள­போது ஏற்­ப­டக்­கூ­டிய சிக்­கல்கள்

இவ்­வா­றான சூலகக் கட்­டிகள் சிறி­ய­ன­வா­கவும் எவ்­வித சிக்­கலும் இல்­லா­த­ன­ வா­கவும் காணப்­படும். எனினும் சில வளர்ந்து வரும் பெரிய கட்­டிகள் வயிற்­று­வலி மற்றும் கட்­டிகள் முறுக்­குப்­ப­டுதல், வெடிப்­ப­டைதல் போன்­ற­வற்றால் ஏற்­படும் உக்­கிர வயிற்­று­வலி மேலும் சிசு கர்ப்­பப்­பை­யினுள் இருக்கும் நிலையில் ஏற்­படும் அசா­தா­ரண தன்­மைகள் அதா­வது குறுக்­காக இருக்கும் நிலை மற்றும் குறை­மாதப் பிர­சவ வலி ஆரம்­பித்தல் போன்ற சிக்­கல்கள் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புக்கள் உள்­ளன.

கர்ப்ப காலத்தில் சூலகக் கட்­டிகள் உள்­ள­போது சாதா­ரண பிர­சவம் முடி­யுமா?

கர்ப்ப காலத்தில் சூலகக் கட்­டிகள் உள்­ள­போது சாதா­ரண பிர­சவம் முடியும். ஆனால் சில வேளைகளில் இந்த சூலகக் கட்டிகள் பிரசவப் பாதையைத் தடுக்கும்போது சாதாரண பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும் இச்சந்தர்ப்பம் குறைவாகவே உள்ளது. சில வேளைகளில் பெரிய சூலகக் கட்டிகள் உள்ளபோது நாம் சிசேரியன் பிரசவத்தை திட்டமிட்டு குழந்தையைப் பிரசவிப்பதுடன் அதேவேளையில் சூலகக் கட்டிகளையும் அகற்றுவோம். இதனால் ஒரே சத்திர சிகிச்சையில் இரு தேவைகளையும் நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15
news-image

ஒலிகோஹைட்ராம்னியோஸ் எனும் பனிக்குட நீர் குறைப்பாடு...

2025-03-06 15:49:10
news-image

குளுக்கோமா நோய் : 2020 ஆம்...

2025-03-06 04:09:10
news-image

சமச்சீரற்ற இதய துடிப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2025-03-03 14:44:16
news-image

இதய பாதிப்பினை கண்டறிவதற்காக சி டி...

2025-03-01 16:56:34