(இராஜதுரை ஹஷான்)
சுதந்திரக் கட்சியின் தற்போதைய செயற்பாடுகள் சந்தேகத்திற்கிடமாக உள்ளன. ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்படுகின்றோம் என்று பெயரளவில் மாத்திரம் குறிப்பிட்டால் போதாது.
செயலளவிலும் செயற்படுத்த வேண்டும். சுதந்திர கட்சியினர் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிப்பது கட்சியை பாதுகாக்கும் என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்
ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருக்க வேண்டுமாயின் சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்க வேண்டும். வீண் முரண்பாடுகளை தோற்றுவிப்பதை சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தவிர்த்துக் கொள்வது அவசியமாகும்.
அதேபோல் தங்கள் சொந்த வேலைக்காக மக்களின் நிதியை பயன்படுத்தியது மற்றும் கொள்ளையடித்தது போன்ற செயற்பாடுகளே கடந்த நான்கு வருடங்களில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டன.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எவராக இருந்தாலும் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு தடையல்ல, கடந்த நான்கு வருட காலமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரதான இலக்காக காணப்பட்டது. கட்சியை பலப்படுத்திக் கொள்வதே தவிர நாட்டு மக்கள் தொடர்பில் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை.
பரந்துபட்ட கூட்டணி வெற்றிப் பெற வேண்டும் என்ற நிலையில் இருந்து ஒத்துழைப்புடன் செயற்படுகின்றோம். ஆனால் ஒவ்வொரு முறையும் சுதந்திர கட்சியினர் பொறுப்பற்ற விதமாகவும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவும் செயற்பட முற்படுகின்றார்கள். கடந்த நான்கு வருட காலமாக ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாகத்தில ; இடம் பெற்ற முறைக்கேடுகளுக்கு சுதந்திர கட்சியும் பொறுப்பு கூற வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM