3 பிள்ளைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை ; மஸ்கெலியாவில் சம்பவம்

Published By: Digital Desk 4

16 Sep, 2019 | 09:27 PM
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டொகம் தோட்ட ஸ்காப்ரோ பிரிவில் இன்று பகல் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் 43 வயதுடைய ராமு மகாலெட்சுமி என்றும் இவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்ததுடன் இச்சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீட்டில் முதியவர் ஒருவருடன் சிறுவர் ஒருவர் மாத்திரமே இருந்ததாகவும், அவ்வேளையில் இருவரும் சுகவீனம் காரணமாக மாத்திரை அருந்தி இருந்தமையால் நித்திரை கொண்டதால் தூக்கிட்டு கொண்டதை பார்க்கவில்லை என்றும், கணவர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பிரேத பரிசோதனைக்காக குறித்த பெண்ணின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38