மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டொகம் தோட்ட ஸ்காப்ரோ பிரிவில் இன்று பகல் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் 43 வயதுடைய ராமு மகாலெட்சுமி என்றும் இவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்ததுடன் இச்சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீட்டில் முதியவர் ஒருவருடன் சிறுவர் ஒருவர் மாத்திரமே இருந்ததாகவும், அவ்வேளையில் இருவரும் சுகவீனம் காரணமாக மாத்திரை அருந்தி இருந்தமையால் நித்திரை கொண்டதால் தூக்கிட்டு கொண்டதை பார்க்கவில்லை என்றும், கணவர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பிரேத பரிசோதனைக்காக குறித்த பெண்ணின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM