மட்டு தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் விவகாரம் ; நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Published By: Digital Desk 4

12 Sep, 2019 | 07:22 PM
image

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள ஜ.எஸ்.ஜ.எஸ் தற்கொலை குண்டுதாரியான  முகமட் ஆசாத்தின் தலை, உடற்பாகங்களை உடனடியாக பிரச்சனைகள் எதுவும் இன்றி எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் புதைப்பதற்கான நடவடிக்கையை அரசாங்க அதிபர் ஊடக மேற்கொள்ளுமாறு மட்;டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு இன்று (12) கட்டளையிட்டுள்ளார்.

கடந்த ஏப்பிரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று  மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற் கொண்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த  34 வயதுடைய முகமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதனை மட்டு புதூர் ஆலையடி மயானத்தில் புதைக்க முற்பட்டபோது அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் அவ்வாறே கள்ளியங்காடு மற்றும் காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் புதைப்பதற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஊள்ளுராட்சி மன்றங்களில் இததை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன 

இவ்வாறான நிலையில் கடந்த மாதம் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் இரவேடு இரவாக குறித்த  உடற்பாகங்கள் புதைக்கப்பட்ட நிலையில் அதற்கு பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் உட்பட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து  கல்லடி பாலத்தில் வீதியை மறித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

குறித்த வீதி மறியல் போராட்டத்தால் வீதிபோக்குவரத்து செயலிழந்ததையடுத்து பொலிசார் ஆர்பாட்டகாரர் மீது கண்ணீர் புகைக்கண்டு தடியடி பிரயோகம் செய்து ஆர்பாட்டக் காரர்களை கலைத்ததுடன் அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உட்பட 5 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிசார் வழக்கு தொடர்ந்தனர் 

பொலிசார் இந்த உடற்பாகங்கள் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டதால் மாவட்டத்தில் அசாதாரண நிலை தோன்றியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்  இதனையடுத்து கடந்த மாதம் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த குறித்த நபரின் உடற்பாகங்களை நீதவான் முன்னிலையில் தோண்டி எடுத்து மீண்டும் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த தற்கொலை குண்டுதாரியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரின்  வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை மட்டு  நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுக்கப்பட்ட போது நீதவான் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள உடற்பாகங்களை அரசாங்க அதிபர் ஊடாக எதுவிதபிரச்சனைகளுமின்றி எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் புதைக்குமாறும் அதன் அறிக்கையை 26 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கட்டளையிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38