திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் நான்கு மீனவர்களை தாக்கியதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 கடற்படை வீரர்களையும் பிணையில் செல்ல திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம். எம். எம். ஹம்சா முன்னிலையில் இன்று (12) நகர்த்தல் விண்ணப்பம் மூலம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28 ஆம் திகதி புல்மோட்டை கடற்பரப்பில் 4 மீனவர்களை தாக்கியதுடன் துப்பாக்கி சூடு மேற்கொண்டதற்காக செவ்வாய்க்கிழமை பத்தாம் திகதி துறைமுகப் பொலிசாரினால் 12 கடற்படை உத்தியோகத்தர்களையும் நீதிமன்றில் ஆஜர் படுத்திய போது அவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதனையடுத்து இன்று வியாழக்கிழமை 12ஆம் திகதி கடற்படை வீரர்கள் சார்பில் சட்டத்தரணி பஸ்நாயக்க நகர்த்தல் விண்ணப்பம் ஒன்றினை தாக்கல் செய்தார்.
இதனையடுத்து திருகோணமலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் திருகோணமலை நீதிமன்றிற்கு சமூகமளித்து புல்மோட்டை பொலிசார் சாட்சியாளர்களை இன்றையதினம் அழைத்து வருவதாகவும் விசேட காரணமாக கருதி அணிவகுப்பினை நடத்துமாறும் நீதிமன்றில் கோரினார்.
இதனை அடுத்து திருகோணமலை நீதிமன்றம் பாதிக்கப்பட்ட 4 பேரையும் அழைத்து வந்தபோது 12 கடற்படையினரில் 08 கடற்படையினரை பாதிக்கப்பட்டவர்கள் இணங்காட்டினர்.
இருந்த போதிலும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிப்ராஸ் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் நீதிமன்ற வளாகத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களை கடற்படையினர் படம் எடுத்ததாகவும், இதனால் 12 சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கக் கூடாது என நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதேவேளை கடற்படையினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாது எனவும் நீதவானிடம் தெரிவித்தார் இதனையடுத்து கைது செய்யப்பட்ட 12 சந்தேக நபர்களையும் தலா இரண்டு இலட்சம் ரூபா பிணையில் செல்லுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
மீண்டும் எதிர்வரும் 16ஆம் திகதி வழக்கு இடம்பெறும் எனவும் திருகோணமலை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM