அம்பாறையில் திடிரென வீசிய பலத்த காற்று - வீதியோர கடைகள் சிலவற்றுக்கு பலத்த சேதம்

Published By: Digital Desk 4

12 Sep, 2019 | 04:55 PM
image

அம்பாறை மாவட்டத்திலுள்ள  சில பகுதிகளில்  திடிரென வீசிய பலத்த காற்று காரணமாக வீதியோர கடைகள் சேதமடைந்தததுடன் போக்குவரத்தும் சிறிது தடைப்பட்டது.

இன்று வியாழக்கிழமை(12) பகல் முதல்  மாவட்டத்தில் மணித்தியாலத்திற்கு  ஏறத்தாழ  60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன் மழையும் தொடர்ந்து பெய்தது.

மேலும் பொத்துவில் முதல் பெரியநீலாவணை  வரையான கடற்பிராந்தியங்களில் கடல் அலை 2 அல்லது 3 மீட்டர் வரை உயர்வடைந்த நிலையில் காணப்பட்டதுடன் அச்சம் காரணமாக மீனவர்கள் எவரும் மீன்பிடிக்க செல்லவில்லை.

குறிப்பாக   கல்முனை  பாண்டிருப்பு மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய பகுதிகளில் வீசிய காற்றினால் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன்   மரங்கள் சிலவும் முறிந்து வீழ்ந்துள்ளன.

அத்துடன் குறித்த காற்று   சுமார் 10 நிமிடங்கள்  வீசியுள்ளதுடன் சிறிது நேரம் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47