(ஆர்.விதுஷா)
மத்தியகிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த மூவர் தொடர்பில் எத்தகைய தகவலும் இதுவரையில் கிடைக்கப்பெறாத காரணத்தால் அவர்கள் தொடர்பிலான தகவல்களை தந்துதவுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
அம்பாறை சொறிக்கல்முனை இல. 35 ஏ வீரச்சோலை, பகுதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை சிவபாலன் பிரமிலா என்பவர் கடந்த 2011 டிசம்பர் 2ஆம் திகதி ஜோர்தானிற்கு தொழில் நிமித்தம் சென்றார். அவர் தொடர்பில் பிறகு எந்த தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.
குவைத் நாட்டுக்கு தொழில் புரிவதற்காக கடந்த 2018 மார்ச் 29ஆம் திகதி எல்பிட்டி, கெட்டன்தொலவத்த இல. 13 தலகஸ்பே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் ரொஷான் என்பவரும், கடந்த 2016 ஜூலை 16ஆம் திகதி மந்தாரம் இல. 283 ஆர் 308 , மல்சரநகர் பகுதியை சேர்ந்த டி.எம்.புத்திக்கா என்பவரும் சென்றுள்ளனர். இது வரையில் அவர்கள் தொடர்பிலான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. எனவே அவர்கள் பற்றி தகவல் எதுவும் கிடைக்கப்பெற்றால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தொலைபேசி இலக்கங்களான 0112-878244, 0112-864136 மற்றும் 0114-380954 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM