கொழும்பு கோட்டையிலிருந்து பொலன்னறுவை வரை பயணிக்கும் “புலதிசி” நகர் சேவை கடுகதி புகையிரதம் இன்று (11) பிற்பகல் தனது பயணத்தை ஆரம்பித்தது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் இந்த பயணத்தில் இணைந்துகொண்டதோடு, அவர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மருதானை புகையிரத நிலையம் வரை பயணித்தார்.
தினமும் பிற்பகல் 3.00 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் புகையிரதம் இரவு 7.45 மணிக்கு பொலன்னறுவையை சென்றடையும்.
மறுநாள் அதிகாலை 3.45 க்கு பொலன்னறுவையிலிருந்து மீண்டும் புறப்படும் புகையிரதம் மு.ப. 9.06 க்கு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.
இப்புதிய கடுகதி புகையிரதம் பொலன்னறுவை, குருணாகல், மஹவ, கெக்கிராவ, ஹபரண, ஹிங்குரக்கொட ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தப்படும்.
இலங்கை புகையிரத சேவைக்கு புதிதாக இணைக்கப்பட்டுள்ள புலதிசி நகர் சேவை கடுகதி புகையிரதம் எஸ் 13 சார்ந்த அதிநவீன சொகுசு புகையிரதமாகும்.
கொழும்பு கோட்டை மற்றும் பொலன்னறுவை நகரங்களுக்கிடையிலான விசேட புகையிரத சேவை கடந்த சில தசாப்தங்களாக இடம்பெறவில்லை என்பதுடன், அந்த குறையை நிவர்த்திக்கும் வகையிலேயே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலையீட்டில் பொலன்னறுவை கடுகதி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மருதானை புகையிரத நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையையும் ஜனாதிபதி இன்று பார்வையிட்டார்.
அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட அதிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM