வட்டவளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வட்டவளை பிட்டவீன் விக்டன் தோட்டத்தில் இறந்த தாயின் சடலத்தை முச்சக்கர வண்டியில் ஏற்றிசென்ற மகன் மற்றும் பேரபிள்ளை தொடர்பிலான விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 09 ஆம் திகதி விக்டன் தோட்டத்தில் சுகயினம் காரணமாக 70 வயதுடைய ராகை என்ற தாயின் சடலம் காணாமல் போயுள்ளமை தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை வட்டவளை பொலிஸ் நிலையத்தில் விக்டன் தோட்டமக்கள் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து பதிவு செய்யபட்ட முறைபாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட வட்டவளை பொலிஸார் தெரிவிக்கையில், குறித்த தோட்டபகுதியில் வசித்த ஏழுபது வயதான ராகை என்ற தாயை சுகயினமுற்ற நிலையில் வீட்டில் இருந்ததாகவும், மகனின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வந்நதாகவும் இரண்டு வருடங்களின் பின் வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கபடுகிறது.
தாய் சுகயினம் காரணமாக 09 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் எனது மகனும் கணவரும் இணைந்து சடலத்தை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றதாகவும் இதுவரையிலும் சடலத்தை எங்கு கொண்டு சென்று என்ன செய்தார்கள் என்பது தொடர்பில் இது வரை எனக்கு தெரியாது என இவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என குறித்த தாயின் மருமகளால் வட்டவளை பொலிஸாருக்கு வழங்கபட்ட வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தாயை அவரது மகன் கொலைசெய்து, சடலத்தை கொண்டு சென்றிருக்கலாம் என தோட்டமக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சடலத்தையும் மகன் மற்றும் பேரபிள்ளையை பொலிஸாருடன் சேர்ந்து பொதுமக்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM