வென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினர் துலக்ஷி ஜமோதரி பெர்னாண்டோ மற்றும் அவரது சகோதரி ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் இருவரும் இன்று மாரவில நீதீவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இருவருகு்கும் விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் செயற்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தியதாகத் தெரிவித்து கைதுசெய்யப்பட்ட வென்னப்புவ பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரும் அவரது சகோதரியையும் கடந்த 6 ஆம் திகதி மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிவான் சந்தேகநபர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
வென்னப்புவ சிரிகம்பல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய துலக்ஷி ஜமோதரி பெர்ணான்டோ எனப்படும் வென்னப்புவ பிரதேசசபை உறுப்பினரும் , அவரது சகோரதரி இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இவர்களின் தந்தையான சமன் அஷோக் குமார் பெர்னாண்டோ 3 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM