(தி.சோபிதன்)
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா இளைஞர்களுடன் இணைந்து கிரிக்கெட் மற்றும் உதைபந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தார்.
யாவருக்கும் வீடு என்ற செமட்ட செவன திட்டத்தின் கீழ் யழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஊரெழுப் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய மாதிர்க் கிராமத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் சஜித் பிரேமதாசா இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது வீட்டுத் திட்டத்தை திறந்து வைத்த வீட்டு உரிமையாளர்களுக்கு பத்திரங்களையும் அமைச்சர் வழங்கி வைத்ததுடன் வீட்டு உபகரணங்கள் மற்றும் அங்கிருந்தவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளையும் வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வின் போது அவ்விடத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் இணைந்து தானும் மென்பந்து கிரிக்கெட் மற்றும் கால்ப்பந்து விளையாட்டுக்ளை விளையாடியிருந்தார்.
அத்தோடு இளைஞர்களுக்கு வளையாட்டு உபகரணங்கள் சிலவற்றை வழங்கியதுடன் மேலும் தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்குவதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM