வலசைப் பறவைகளின் வருகை வடக்கு மண்ணுக்கு வரப்பிரசாதம் : பொ.ஐங்கரநேசன்

Published By: Priyatharshan

16 May, 2016 | 12:23 PM
image

( மயூரன் )

வலசை பறவைகள் வந்து தங்கிச் செல்லும் இடமாக இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பல இடங்கள் உள்ளன. இது வடக்கு மண்ணுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு சுற்றாடல் அமைச்சு வலசைப் பறவைகள் பற்றிய மூன்று நாள் செயலமர்வையும் வெளிக்களப் பயிற்சியையும் உலக வலசைப் பறவைகள் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

வடக்கின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் 100மாணவர்கள் பங்கேற்ற இந்தச் செயலமர்வு மற்றும் வெளிக்களப் பயிற்சியின் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்கு இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு மாகாணம். யாழ்.குடாநாட்டில் காணப்படும் தொண்டைமானாற்றுக் கடல்நீரேரி, உப்பாற்றுக் கடல்நீரேரி, யாழ்ப்பாணக் கடல்நீரேரிகளின் கரைகளில் கண்டல் மரங்கள் செழித்து வளர்கின்றன. 

இந்தச்சூழல் பறவைகள் இரைதேடவும் தங்கிச்செல்லவும் வாய்ப்பாக இருப்பதால் உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பறவை இனங்கள் இங்குவந்து சேர்கின்றன.

வடக்கில் பிளமிங்கோ எனப்படும் பூநாரைகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதனால் பறவை ஆய்வாளர்களின் கவனமும் சுற்றுலாப் பயணிகளின் கவனமும் வடக்குக்கு வருகின்ற வலசைப்பறவைகள் மீது இப்போது திரும்ப ஆரம்பித்துள்ளது.

வலசைப்பறவைகள் வெறுமனே எமது பொழுதுபோக்குக்காகவும் ஆய்வுக்கான ஒரு துறையாகவும் மட்டும் அல்லாமல் வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார வருவாயை ஈட்டித்தரும் சூழற் சுற்றுலாவை விருத்தி செய்யவும் உதவும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், யாழ்.பல்கலைக்கழக விலங்கியல்துறைத் தலைவர் இரா.ஞானேஸ்வரன் மற்றும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் அ.அகிலதாஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

பூமியின் வடக்குப்பகுதியில் பனிபடிய ஆரம்பிக்கும்போது அப்பிரதேசங்களில் வாழுகின்ற பறவைகள் இரைதேடுவதற்காக வெப்பப்பிரதேசங்களை நோக்கி கூட்டம் கூட்டமாக குடிபெயர்கின்றன. குளிர்விலகும் போது தங்கள் சொந்த இடங்களுக்கு பாதை தவறாமல் திரும்பிச்செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06