(செ.தேன்மொழி)
குளியாப்பிட்டி பகுதியில் எரிவாயு கசிந்து இடம்பெற்ற தீ விபத்தில் இரு கடைகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

குளியாப்பிட்டி நகரத்தில் உணவக மொன்றில் இன்று முற்பகல் 11 மணிக்கும் 12 மணிக்கும் இடையில் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விரைந்து செயற்பட்ட பொலிஸார் தீயணைப்பு படையுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தீப்பரவலின் காரணமாக குறித்த பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. பின்னர் பொலிஸ் தீயணைப்பு படையினரும் , நகரசபையின் தீயணைப்பு படையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவத்தில் உணவகம் ஒன்றும் , ஆடை வர்த்தக நிலையமொன்றும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM