இனங்களுக்கிடையில் மத இன நல்லிணகத்தை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த விகாரை விகாராதிபதி பட்ட பொல ஸ்ரீ குனானந்த நாயக்க தேரரின் ஆலோசனைக்கு அமைய மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் ஜெயந்திபுரம் பௌத்த விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி ஆலயத்தின் பிரதிஷ்டா மகாகும்பாபிஷேக விஞ்ஞாபனம் நிகழ்வு மிக சிறப்பாக நேற்று நடைபெற்றது.
கள்ளியங்காடு ஸ்ரீ ஆஞ்சநேய ஆலய பிரதம குரு சிவஞான திலகம் சிவஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வரக் குருக்கள் தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் கிரிகைகள் ஆரம்பமாகி தானிய வாசம் ,வாஸ்து சாந்தி ,,தூபி ஸ்தாபனம் யாக பூஜைகள் இடம்பெற்று ஸ்ரீகண் திருஷ்டி கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
விநாயர் வழிபாடுகளுடன் விசேட யாக பூஜைகளுடன் கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.
விநாயர் வழிபாடுகளுடன் விசேட யாக பூஜைகளுடன் கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம் நிகழ்வுகள் அடியார்கள் புடை சூழ அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன் கோலாகலமாக நடைபெற்றது .
தொடர்ந்து பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூல மூர்த்தியாகிய கணபதிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது .பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன பிரதம குரு கள்ளியங்காடு ஸ்ரீ ஆஞ்சநேய ஆலய பிரதம குரு சிவஞான திலகம் சிவஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன நிகழ்வில் ஜெயந்திபுரம் கிராம மக்கள் கலந்து சிறப்பித்தனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM