சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் நாளை (07.09.2019) அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தை ஜூலை 22 ம் திகதி இஸ்ரோ விண்ணில் ஏவியது.
சந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை கொண்ட விண்கலத் தொகுப்பு. இதில், நிலவை சுற்றி வரும் கலன் (ஆர்பிட்டர்) ஒன்றும், நிலவில் தரையிறங்கும் கலன் (லேண்டர்) ஒன்றும், நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும் உலாவி (ரோவர்) ஒன்றும் இருக்கும்.
பூமியில் இருந்து புறப்பட்டு 47 நாட்களுக்கு பிறகு சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் தற்போது, சரியாக நிலவிற்கு 100 மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த லேண்டர் நாளை அதிகாலை நிலவில் தரையிறங்க உள்ளது. லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரடியாக பார்வையிடுவார் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக இஸ்ரோ இன்று (06.09.2019) வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 7 ம் திகதி அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணி வரை லேண்டர் விக்ரம் நிலவில் மெல்ல மெல்ல தரையிறங்கும். இதை தொடர்ந்து நாளை காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் ரோவர், சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து வெளிப்பட்டு நிலவில் தனது ஆய்வை துவக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடந்தால் 78 விநாடிகளில் லேண்டர், நிலவில் தரையிறங்கும் பணி நிறைவடையும். நிலவின் தென் பகுதியில் 350 கி.மீ., தூரத்தில் சந்திரயான் 2 தரையிறங்க உள்ளது.
இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் எப்படி தரையிறங்கும், அதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவிகள் குறித்து இஸ்ரோ வீடியோ வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 10 ஆம் திகதி முதல் லேண்டர், நிலவில் இருந்து புகைப்படங்களை அனுப்ப துவங்கும். இந்த திட்டம் வெற்றி அடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM