வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா இன்று இடம்பெற்ற நிலையில் சக்கரம் ஒன்று இறுகியதால் அம்பாள் இடைநடுவே இறக்கப்பட்டு அடியவர்களின் தோளில் வீதியுலா வரும் நிலை ஏற்பட்டது.
தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு தேர் திருவிழா நடைபெற்றது.
பிள்ளையார், அம்பாள் மற்றும் முருகப் பெருமான் தேரில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். இரவு 7.45 மணியளவில் ஆலயத்தின் மேற்கு வீதியில் தேர் ஒடிவந்த நிலையில் அசைய மறுத்தது.
அதனையடுத்து அடியவர்கள் கூடி முயற்சித்த போது தேரின் ஒரு சக்கரம் இறுகியதால் மஞ்சம் அசையவில்லை.
அதனால் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டுவரப்பட்டு முயற்சிக்கப்பட்ட போதும் தேர் ஓடவில்லை. அதனால் சுமார் ஒரு மணி நேரம் 45 நிமிடங்களின் பின் விநாயகப் பெருமான், அம்பாள், முருகப் பெருமான் இறக்கப்பட்டு அடியவர்களின் தோளில் வீதியுலா இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM