சஜித் - வாசு ஆகியோருக்கிடையில் சபையில் கடும் வாக்குவாதம் 

Published By: R. Kalaichelvan

04 Sep, 2019 | 06:53 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

" யார் இனவாதிகள், யார் இன, மத கலவரங்களை கையில் எடுத்தது"  என எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயகார எம்.பிக்கும்  அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட  ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

பண்டா-செல்வா ஒப்பந்தத்தை குழப்பியதும் 83 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை கையில் எடுத்ததும் யார் என்பதை மறந்துவிட வேண்டாம் என சபையில் சாடினார் வாசுதேவ எம்.பி. 

பாராளுமன்றத்தில் இன்று மத்திய கலாசார நிதியம் தொடர்பிலான விவாதம் இடம்பெற்ற வேளையில்  மத்திய கலாசார நிதியம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயகார, " மத நல்லிணக்கம் என்பது வெறுமனே ஒரு தரப்பை பலப்படுத்துவதை கொண்டு கையாள முடியாது. 

பெளத்த விகாரைகள் குறித்து மட்டும் அல்லாது ஏனைய மத அபிவிருத்திகளுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லிணக்கம் என்பது இரண்டு தரப்பின் மத ஒருமைப்பாடு உருவாக்கப்பட வேண்டும். 

பொது இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும். ஆனால் அதில் தான் சிக்கலே உள்ளது. உரிமை கூறும் தன்மையில் தான் பிரச்சினை எழுகின்றது. ஆனால் அதனையும் தாண்டி நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்றே நானும் கூறுகின்றேள் என்றார். இதனை அடுத்து அமைச்சர் சஜிதுக்கும் வாசுதேவ எம்.பிக்கும் இடையில் வாத பிரதிவாதம் உருவாகியது. 

சஜித் :- உரிமை கோரலில் எந்த பிரச்சினைகளும் இல்லை, மத அபிவிருத்திகள் நல்லிணக்க அடிப்படையில் முன்னெடுக்கவே முயற்சிகளை எடுக்கின்றோம். 

வாசுதேவ:- ஆனால் ஒரு மதத்தவருக்கு செய்யும் நடவடிக்கை இன்னொரு மதத்தவருக்கு அவமானமாக கருதப்படும் என்றே நான் கூறுகின்றேன். 

சஜித்:- அது உண்மையே.  விகாரை எவ்வாறு அபிவிருத்து செய்யப்படுமோ அதேபோல் கடந்த காலங்களில் நாசமாக்கப்பட்ட இஸ்லாமிய பள்ளிவாசல்களும் அபிவிருத்து செய்யப்படும். கம்பளை, கண்டி, குருநாகல் மாவட்டங்களில் நாசமாக்கப்பட்ட சகல பள்ளிவாசல்களும் திருத்தப்படும். புத்தசாசனத்துக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை ஏனைய மதங்களுக்கும் கொடுத்து அனைவரையும் பாதுகாக்கவே நாம் நடவடிக்கை எடுக்கின்றோம். 

வாசுதேவ :- இனவாதம், மதவாதத்தை தூண்டும் தேவை யாருக்கு உள்ளது. நாட்டில் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் நபர்களுக்கே இந்த தேவை உள்ளது. ஆனால் எமக்கு அவ்வாறான எந்தவொரு நோக்கமும் இல்லை. 

சஜித்:- நீங்கள் அவ்வாறு செயற்படும் நபர் அல்ல. ஆனால் உங்களின் அணியின்  கண்ணாடியில் சென்று பார்த்தால் யார் அவ்வாறு செயற்படுவது யாரென்று தெரியும். 

வாசுதேவ :- மக்களின் எண்ணங்களில் மாற்றங்கள், தன்மைகளின் மாற்றங்கள், உணர்வுகளில் பாரமான மாற்றங்கள் இருக்க முடியும்.

 ஐக்கிய தேசிய கட்சி 1958இலும் அதேபோல் 1983 ஆம் ஆண்டிலும் கலவரங்களை செய்து இனவாத மதவாத குழப்பங்களை ஏற்படுத்தும் தலைவர்களை கொண்ட கட்சி. 

இந்த குற்றத்தை எமது பக்கம் சுமத்த முயற்சிப்பதென்றால் அதனை ஆதரங்களுடன் கூற வேண்டும். எமது பக்கம் இனவாதம் பரப்பும் தலைவர்கள் இல்லை. பண்டா -செல்வநாயகம் உடன்படிக்கைக்கு எதிராக ஜே.ஆர்.ஜெயவர்த்தன செயற்பட்டதை நீங்கள் மறந்திருக்க முடியும். 

1983 ஆம் ஆண்டு சிறில் மேத்திவ் வீதியில் இறங்கி தமிழ் மக்களுக்கு எதிராக கலவரம் செய்ததை நீங்கள் மறந்திருக்க முடியும். இதெல்லாம் நீங்கள் மறந்திருக்க முடியும். ஆனால் எமக்கு இனவாத மதவாத பிளவுகள் தேவையில்லை. 

வேலை செய்யும் மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். பண்டாரநயாக செல்வநாயகம் உடன்படிக்கையை அன்று எதிர்த்ததே ஐக்கிய தேசிய கட்சி தான் . ஆதரங்களுடன் நாம் கூறுகின்றோம், ஆனால் ஆதாரம் இல்லாத கருத்துக்களை நீங்கள் கூறுகின்றீர்கள் என்றார். 

இதனை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் வாசுதேவ எம்.பிக்கு எதிராக குரல் எழுப்பினர். எனினும் அவர்களின் கருத்துக்களை நிராகரித்த வாசுதேவ எம்.பி, 

சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவது குறித்தே இன்று பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்று வருகின்றது.

சஜித் ஜனாதிபதி வேட்பாளரானால் நான் அவருக்கு எதிராகவே செயற்படுவேன். ஆனால் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வேன்.

ஏனென்றால் எமக்கு தேர்தலில் போட்டியிட புதிய எதிராளி ஒருவருடன் நாம் போட்டியிடுவோம். அதில் எம்மால் இருக்கும் நிலைமைக்கு அப்பால் உறுதியாக வெற்றியொன்றை பெற்றுக்கொள்ளும் போராட்டத்தை முன்னெடுக்க முடியும். அப்படி நான் நினைகின்றேன் எனவும்  குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11