தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை கூடங்களில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டால்... அது அவனுடைய உயிரிழப்புக்கு வழிவகுக்கும் . தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் 5% பேர் இது போன்ற பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே இதனை அகற்றுவதற்காக தற்பொழுது லேமினார் ஃப்ளோ எனப்படும் கட்டமைப்புடன் கூடிய நவீன சத்திர சிகிச்சை கூடம் அமைக்கப்படுகிறது.
லேமினார் ஃப்ளோவுடன் அமைக்கப்படும் சத்திரசிகிச்சை கூடங்களில், தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது. பிறரிடமிருந்து நோய்த்தொற்று ஏற்படாமல் அவர்களின் உயிரை காக்க முடியும். இத்தகைய கட்டமைப்புடன் கூடிய சத்திரசிகிச்சை கூடத்தை நிர்மாணிப்பதற்கு இந்திய மதிப்பில் மூன்று கோடி ரூபாய் செலவாகும் என்பதால் பெரும்பாலான மருத்துவமனைகளில் இவ்வசதி மேற்கொள்ளப்படுவதில்லை.
ஆனால் பொதுவாக சத்திரசிகிச்சை கூடங்களில் குறிப்பிட்ட சில தீவிர சத்திரசிகிச்சை பிரிவுகளில் மட்டுமே லேமினார் ஃப்ளோவுடன் கூடிய வசதிகள் செய்யப்பட்டிருக்கும். இத்தகைய வசதிகள் அமைக்கப்பட்டிருக்கும் சத்திரசிகிச்சை கூடத்தில் காற்றில் பரவும் பாக்டீரியா கிருமிகளையும், தொற்றுகளையும் முழுமையாக வடிகட்ட இயலும். கிருமிகள் நிறைந்த சூழலை கூட சுகாதாரமாக மாற்றுவதற்கு இத்தகைய கட்டமைப்பு பயன்படுத்தப்படுகின்றன.
இதனிடையே தெற்காசியா முழுவதும் தற்போது குறிப்பாக தீக்காயமடைந்தவர்களுக்காக சிகிச்சையளிக்கப்படும் சத்திர சிகிச்சை பிரிவு கூடத்தில் இத்தகைய லேமினார் ஃப்ளோ வசதி கொண்ட சத்திர சிகிச்சை கூட கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 95 சதவீதத்திற்கு மேல் காப்பாற்றப்படுகிறார்கள்.
டொக்டர் வசந்தாமணி.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM