பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கை எதுவுமின்றி விலகுவது, அது குறித்து எதிர்ப்பைத் தெரிவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தொடர்பாக பாராளுமன்றில் நடந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 328 வாக்குகளும், எதிராக 301 வாக்குகளும் கிடைத்துள்ளது.
இந்த வாக்குப்பதிவு பற்றி குறிப்பிட்டு பதிலளித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டில் பொதுத்தேர்தல் வழக்கத்தைவிட முன்னதாகவே நடத்திட வழிசெய்யும் மசோதாவை தான் கொண்டுவர உள்ளதாக தெரிவித்தார்.
தேர்தல் நடப்பதற்குமுன் பிரெக்ஸிட் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கார்பைன் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 21 எம்பிக்கள் எதிர்கட்சிகளுடன் இணைந்து அரசின் முயற்சியை தோற்கடித்துள்ளனர்.
இந்த வாக்குப்பதிவுக்கு பிறகு, கட்சியின் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த எம்பிக்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவர் என்று அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு தான் விரும்பவில்லை என்ற போதும் உடன்படிக்கையின்றி பிரித்தானியா விலகுவது தொடர்பான வாக்கெடுப்பில் அது குறித்து எதிர்ப்பைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றால் அவ்விவகாரத்தில் முன்னேற்ற நிலையை எட்டுவது சாத்தியமற்றுப் போய்விடலாம் என்பதால் தேர்தலொன்றை நடத்த வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் கூறினார்.
டோரி கட்சியிலுள்ள எதிர்ப்பாளர்கள் தொழில் கட்சியினருடன் இணைந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கை எதுவுமின்றி விலகுவதை தடுத்து நிறுத்துவதற்கான சட்டமூலமொன்றை கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சட்டமூலம் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான பிறிக்ஸிட் செயற்கிரமத்தை எதிர்வரும் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதிவரை ஒத்திவைக்க பிரதமரை நிர்ப்பந்திக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM