ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் குடியிருப்பு பிரதேசமொன்றில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பின்னிரவு இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி குறைந்தது 16 பேர் பலியானதுடன் 100 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க விசேட தூதுவர் சல்மே காலிஸாத் தலிபான்களுடனான சமாதான உடன்படிக்கையொன்றை எட்டுவதை ஊக்குவிக்கும் முகமாக காபூல் நகருக்கு விஜயம் செய்துள்ள நிலையிலேயே இந்தக் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட சமயம் ஆப்கானிஸ்தானின் பிரதான தொலைக்காட்சி சேவையான தோலோ நியூஸில் சல்மே காலிஸாத்தின் பேட்டி ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெருமளவு வீடுகள், உதவி முகவர் நிலையங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் கட்டிடங்கள் பலவும் அமைந்துள்ள கிறீன் விலேஜ் பிராந்தியத்தில் சுவரொன்றின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட டிரக்டர் வண்டியொன்றை பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பையடுத்து அந்தப் பிராந்தியத்திலிருந்து துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்ட வண்ணம் இருந்ததாகவும் அருகிலுள்ள பெற்றோல் நிலையமொன்று எரிந்ததால் வானளாவு புகைமூட்டம் எழுந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் உரிமைகோரியுள்ளனர். தமது குழுவைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரியொருவரும் துப்பாக்கிதாரிகளும் இந்தத் தாக்குதலில் பங்கேற்றதாக தலிபான் பேச்சாளர் நஸ்ரத் முஜாஹித் தெரிவித்தார்.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை கண்டறிய உதவும் உபகரணம் இந்தோனேசியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பூமி அதிர்ச்சியின்போது இடிபாடுகளின் கீழ் உயிருடன் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிய உதவக்கூடிய கடனட்டை அளவான சிறிய உபகரணமொன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
டியற்ரெறியன்ஸ் என்ற இந்த உபகரணம் பூமியதிர்ச்சியின் போது தரையின் கீழ் 10 கிலோமீற்றருக்கும் அதிகமான ஆழத்தில் புதையுண்ட ஒருவரிடம் மூச்சு விடுதல் உள்ளடங்கலாக மிகவும் சிறிய அசைவுகள் காணப்படும் பட்சத்தில் ஊதா நிற ஒளியை வெளிப்படுத்தி அது தொடர்பில் மீட்புப் பணியாளர்களை எச்சரிக்கும் வல்லமையைக் கொண்டது என இந்த ஆய்வில் பங்கேற்ற மாணவரான சட்றியோ விரதினட்டா றியடி போயர் (23 வயது) தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM