உலகிலேயே இருதயத்தில் நுண் கணினி உபகரணம் பொருத்தப்பட்ட முதலாவது நோயாளி என்ற பெயரை பிரித்தானியாவைச் சேர்ந்த 75 வயது பெண்மணி பெறுகிறார்.
பர்மிங்காமைச் சேர்ந்த மார்க்ரெட் மக்டெர்மோதி என்ற மேற்படி பெண் இருதய இயக்கம் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு கடந்த ஜூலை மாதத்தில் இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவரது இருதய தசைகள் குருதியை உடல் எங்கும் செலுத்துவதற்கு போதிய சக்தி இல்லாது பலவீனமாகக் காணப்பட்டதால் அவர் உயிராபத்தான நிலையை தொடர்ந்து எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது இருதயத்தில் திடீரென ஏற்படக்கூடிய செயலிழப்பை உடனுக்குடன் அறிந்து தாமதமின்றி அவருக்கு சிகிச்சையை மேற்கொண்டு அவரது உயிரைக் காப்பாற்றும் முகமாக அவரது இருதயத்தில் நுண் கணினி உபகரணமொன்று பொருத்தப்பட்டது. இந்த உபகரணமானது அவரது இருதய தசைகளுக்கு குருதியை உடல் எங்கும் செலுத்த முடியாத நிலை ஏற்படுகையில் அது தொடர்பில் ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவர்களுக்கு எச்சரிக்கை செய்து அவருக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட வழிவகை செய்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM