அவுஸ்திரேலியாவில் இருந்து தமிழ் குடும்பத்தை நாடுகடத்துவதில் பீற்றர் டட்டன் விடாப்பிடி

Published By: R. Kalaichelvan

03 Sep, 2019 | 11:11 AM
image

இலங்­கைக்கு தமிழ்க் குடும்பம் ஒன்றை நாடு கடத்­து­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து, அவுஸ்­தி ரே­லி­யாவின் பல்­வேறு நக­ரங்­க­ளிலும் நேற்­று­முன்­தினம் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­டன.

நடே­ச­லிங்கம் – பிரியா தம்­ப­திகள் மற்றும் அவர்­களின் 4 வய­துக்­குட்­பட்ட இரண்டு குழந்­தை­களை நாடு­க­டத்­து­வதில் அவுஸ்­ரே­லிய அரசு விடாப்­பி­டி­யாக உள்­ளது.

கடந்த சனிக்­கி­ழமை தனி விமா­னத்தில் ஏற்­றப்­பட்ட இந்தக் குடும்­பத்­தி­னரை, இலங்­கைக்கு அனுப்ப நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

விமானம் புறப்­பட்ட பின்னர் நீதி­பதி ஒருவர் தொலை­பேசி மூலம் பிறப்­பித்த உத்­த­ர­வினால் அந்த விமானம் மீண்டும் டார்­வி­னுக்குத் திருப்­பப்­பட்­டது.

இதை­ய­டுத்து, அந்த தமிழ் குடும்­பத்­தினர், கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகா­முக்கு கொண்டு செல்­லப்­பட்டு, தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளு­ட­னான தொடர்­புகள் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த நிலையில் அவர்­களை நாடு கடத்தக் கூடாது என வலி­யு­றுத்தி நேற்­று­முன்­தினம் அவுஸ்­ரே­லி­யாவின் பல்­வேறு நக­ரங்­க­ளிலும் ஆயி­ரக்­க­ணக்­காக மக்கள் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டனர்.

எனினும், இந்தப் போராட்­டங்­களை நிரா­க­ரித்­துள்ள அவுஸ்­ரே­லிய உள்­துறை அமைச்சர் பீற்றர் டட்டன், தமிழ் குடும்­பத்­தி­னரின் நாடு கடத்­தலை தடுக்க முடி­யாது என்று தெரி­வித்­துள்ளார்.

இலங்­கை­யி­லி­ருந்து கடந்த ஆகஸ்ட் 7ஆம் திக­தியும் கிறிஸ்மஸ் தீவுக்கு குடி­யேற்­ற­வா­சி­களின் படகு ஒன்று வந்­ததை சுட்டிக் காட்டியுள்ள அவர், இவர்களை தங்க அனுமதிப்பதானது அவுஸ்ரேலியாவின் எல்லை பாதுகாப்பு கொள்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்