வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸவரர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 4ம்திகதி (புதன்கிழமை )ஆரம்பமாகி 13ம் (வெள்ளிக்கிழமை)திகதி பூரணை தினத்தன்று நிறைவு பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளத்திணைக்களத்தினர் குறித்த ஆலயத்திற்கு மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என்று தடை விதித்து வரும்நிலையில் பிரதேச மக்களின் நெருக்கடி மற்றும் போராட்டம் கொண்ட முயற்சியினால் இன்றுவரை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பல வருடங்களாக மூன்று நாட்கள் மாத்திரமே திருவிழாவினை நடத்தி வந்த நிலையில் இந்த வருடம் முதல் பத்து நாட்கள் திருவிழாவினை மேற்கொள்ள பிரதேச மக்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே சிவன் அடியவர்களே!
திருவிழா நாட்களில் எமது ஆலயத்திற்கு வருகை தந்து இறைவனின் ஆசியினைப்பெற்று எங்கள் மலையையும் எங்கள் கடவுளையும் காப்பாற்ற அனைவரும் இந் நன்னாளில் ஒன்றிணைந்து வருகைதருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM