மானிட வளர்ச்சியும் செயற்கை அறிவுத்திறனின் தாக்கமும்

Published By: Digital Desk 3

02 Sep, 2019 | 11:29 AM
image

"எழுந்து நடந்தால் இமயமலையும் வழிகொடுக்கும்; உறங்கி கிடந்தால் சிலந்தி வலையும் சிறைபிடிக்கும்"   என்பது போல் கைத்தொழில் புரட்சியின் பின்னரான மனித சமுதாயமானது எல்லைகளைத் தாண்டி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஓய்வின்றி  முயற்சிக்கின்றது.  ஒவ்வொரு  நாளும்  புதிய  கண்டுப்பிடிப்புகளை நோக்கிய மனிதனின் பயணமானது வியப்பும் விந்தையளிப்பதுமாக உள்ளது. அந்த விந்தைகளுள் ஒன்றான செயற்கை அறிவுத்திறன் (Artificial Inteligence) பிரயோகமானது இன்று உச்சத்தை எட்டியுள்ளது.

செயற்கை  அறிவுத்திறன் என்பது கடந்த  காலத்தில்  நிகழ்ந்த  விடயங்களை கொண்டு எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கக் கூடிய வல்லமை பெற்றது. ஜான் மேக்கர்த்தி என்பவர் 1956 இல் இந்தச்சொல்லை அறிமுகப்படுத்தி இதனை "நுண்ணறிவு இயந்திரங்களை உருவாக்கும் அறிவியல்" என வரையறுத்தார்.

 இந்தத் துறையானது மனிதர்களின் பொதுவான ஒரு குணத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. "பகுத்தறிவு"  என்ற இந்த குணத்தை ஓர் இயந்திரத்திலும் வடிவமைக்க முடியும் என விவரித்தது. இருப்பினும் இது அறிவியலில் பல சிக்கல்களை தோற்றுவித்ததன் விளைவாக அன்றைய காலக்கட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளின் விளைவாக மீண்டும் நுண்ணறிவு இயந்திரங்களை உருவாக்குவதற்கான அணுகுமுறைகள் தேடப்பட தொடங்கின.

இதன் விளைவாக 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செயற்கை அறிவுத்திறனை மூலாதாரமாக கொண்ட இயந்திரங் களின் பாவனை அதிகரித்தது. உதாரணமாக செயற்கை அறிவுத்திறனை   அடிப்படையாகக்   கொண்டு   வடிவமைக்கப்பட்ட மடிக்கணனிகள், இயந்திரமனிதன் என்பவற்றைக் குறிப்பிடலாம். இதன் தாக்கமானது மனித வளர்ச்சியோடு இணைந்து 700பில்லியனுக்கு மேற்பட்ட சனத் தொகை கொண்ட உலகத்தை கூகுள் (Google) என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடக்கிவிட்டது. உலகத்தில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அடுத்த நொடியே அதனை அறியக்கூடிய அளவிற்கு அனைத்து துறைகளிலும் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் இயந்திர மனிதனின் (Robot)   பாவனை அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பரவலாக காணமுடிகின்றது. மரத்தடியில் கல்வி கற்ற காலம் முடிந்து நவீன வசதிகள் கொண்ட வகுப்பறைகள் மற்றும் ரோபோ வழிமூலகல்வி வரை பரிணமித்துள்ளது. கல்வி மட்டுமன்றி விவசாய துறையை எடுத்துக் கொண்டோமானால் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் உலக நாடுகள் எதிர் நோக்கிய பாரிய சவாலாக உணவு பற்றாக்குறை காணப்பட அதற்கு தீர்வாக பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. அதனையும் தாண்டி இன்று நிலப்பற்றாக் குறைக்கு தீர்வாக செயற்கை அறிவுத் திறனைப் பயன்படுத்தி ஜப்பான் முதலிய  நாடுகளில்  ரோபோக்களின்  துணை  கொண்டு  கடல்  மேற்பரப்பிலும் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 அதேபோல் வங்கித்துறையிலும் செயற்கை அறிவுத்திறன் அதி முக்கிய பங்கினை வகிக்கின்றது. பண்ட பரிமாற்ற முறையில் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல் செயன்முறை இன்று தானியங்கி பணப்பரிமாற்று இயந்திரங்களில் (ATM Machine) மேற்கொள்ளப்படுகின்றது. இதனைத் தவிர வளர்ச்சியடைந்த நாடுகளின் மருத்துவத்துறையில் அறுவை          சிகிச்சைகளின் போது ரோபோக்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. இது இந்நூற்றாண்டில் மனித சமுதாயம் கண்ட மாபெரும் வெற்றியாகும்.

இவ்வாறு பல துறைகளில் நல்ல விடயங்களுக்கு இவை பயன்படுத் தப்பட்டாலும் சில  நாடுகள்  ஏனைய  நாடுகளை  தன்  கட்டுப்பாட்டின்கீழ்  வைக்க இத்தொழிநுட்பத்தை தவறாகப் பயன்படுத்துகின்றன. இது சர்வதேச அரசியலில் ஒரு பனிப்போர்   நிலையை   உருவாக்கியுள்ளது. மனிதனால்   ஆக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இத்தொழிநுட்பம் சில நாசகாரர்களின் கைபொம்மையாயிருப்பது வருத்தமளிக்கின்றது.  சுயநலங்களை  மறந்து  வளர்ச்சியை  மட்டும்  கருத்திற் கொண்டு செயல்படும் பொழுது மனித சமுதாயமானது எட்டாத உயரங்களையும் எட்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

ச.ரவிகுமார் 
தொடர்பாடல் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடம்,
திருகோணமலை வளாகம்,
கிழக்கு பல்கலைகழகம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04