இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலைதீவு பயணமாகியுள்ளார்.
மாலைதீவு - பெரடைஸ் ஹோட்டலில் இடம்பெறவுள்ள 2019 - இந்து சமுத்திர இரு நாள் மாநாட்டிற்கு பிதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்கவுள்ளார்.
இந்திய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டிற்கு மாலை தீவு அரசாங்கம் மற்றும் சிங்கப்பூரில் அமைந்துள்ள சர்வதேச கற்கைகளுக்கான எஸ்.ராஜரட்ணம் நிலையம் ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது.
அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலியின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது பல்துறைசார் இரு தரப்பு உறவுகள் மற்றும் பூகோள இ பிராந்திர விடயங்களில் ஒன்றிணைந்து செயற்படுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்பட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு இந்த விஜயத்தின் போது இலங்கை மற்றும் மாலைதீவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடப்படவுள்ளது. இலங்கையில் அரச மற்றும் அரசு அல்லாத பிரிவுடன் இணைக்கப்பட்ட உயர்கல்விக்கான சந்தர்ப்பத்தை விரிவுபடுத்துவதன் மூலம் வெளிநாட்டு பரிமாற்றலை நாட்டிற்குள் பெற்றுக் கொள்வதற்கும் இலங்கையின் உயர் கல்விக்கான சந்தர்ப்பத்தை தெற்காசிய வலயத்துக்குள் விரிவுபடுத்துவதற்கும் இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
நீர் வழங்கல் துறையில் பொறியியலாளர்களின் நிபுணத்துவ அறிவை மாலைதீவு அரசாங்கத்திற்கு வழங்குவதன் மூலம் பயன்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM