இந்தியா - தமிழகத்தைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர் சுமார் 40 ஆண்டுகளாக மண்ணை உட்கொண்டு உயிர் வாழ்ந்து வரும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே சூசைநகர் பகுதியில் வசித்து வரும் 80 வயது வயோதிபப் பெண் மரியசெல்வம். இவர் பல ஆண்டுகளாக மண்ணை உட்கொண்டு வாழ்ந்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறும்போது, சிறு வயது முதலே மண் என்றால் அலாதி பிரியம். அதனை அப்படியே எடுத்து வாயில் போட்டு உண்பேன். நாளடைவில் அதனையே உணவாக உட்கொள்ள ஆரம்பித்தேன். மண்ணை கொண்டு வந்து அதை சலித்து பின் அதை நொறுக்குத்தீனி போல மென்று உண்பேன்.
ஆரம்பத்தில் உண்ணும்போது வயிறு வலி ஏற்பட்டது. நாளடைவில் அதுபோன்ற பிரச்சினை ஏதுமில்லை. இதுவரை எனக்கு எந்தவொரு உடல் உபாதையும் ஏற்பட்டது கிடையாது. வைத்தியரையும் சென்று பார்த்தது கிடையாது. நல்ல ஆரோக்கியத்துடனேயே உள்ளேன்.
எனது வீட்டில் உள்ளவர்கள் கண்டித்த போதும் நான் மண்ணை உண்ணும் பழக்கத்தை விடவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக மண் உண்டு உடல் ஆரோக்கியத்துடன் இருந்து வரும் 80 வயதான மரிய செல்வத்தை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM